அதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்
மாணவி பாத்திமா தற்கொலையில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது
Recommended Video
சென்னை: ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் கேரள, தமிழக மக்களிடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. பாத்திமா மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாத்திமா குற்றம்சாட்டிய பேராசிரியர்களிடம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை வாக்குமூலத்தையும் பெற்றிருக்கிறது.
18 வயது கேரள மாணவி ஃபாத்திமா லத்திஃப், சென்னை ஐஐடியில் படித்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாஸ்டல் ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எல்லா தேர்விலும், எல்லா பாடங்களிலும், பாத்திமா முதல் மார்க் எடுப்பாராம்.
ஆனால், போன மாசம் இன்டர்னல் தேர்வு நடந்துள்ளது.. அதில், ஒரே ஒரு பாடத்தில் மட்டும் கம்மியான மார்க் வாங்கியதால் மன உளைச்சலில் தூக்கு போட்டுக் கொண்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக இவரது தந்தை அப்துல் லத்தீப் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அழுதாள்
"பேராசிரியர் பத்மனாபன் என் மகளை அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். அவர் தன்னை அழ வைக்கிறார்.. அவரை பற்றி அடிக்கடி எங்களிடம் சொல்லி கொண்டே இருப்பாள்.. தினமும் ராத்திரி 9 மணி ஆனால், ஹாஸ்டலில் என் மகள் அழுதிருக்கிறாள்.. அதனால் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ய வேண்டும்" என்று போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

பெற்றோர் மனு
அதேபோல, தமிழக காவல்துறையினர் விசாரிக்கும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என வலியுறுத்தி கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் பாத்திமாவின் பெற்றோர் மனு அளித்துள்ளனர். பெற்றோரின் இந்த பரபரப்பு தகவலால் கேரளா மட்டுமல்லாமல், தமிழகமும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.

ஜவாஹிருல்லா
மதரீதியான துன்புறுத்தல் காரணமாகவே பாத்திமா மரணமடைந்துள்ளதாகவும், பேராசிரியர் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என்றும், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உட்பட பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விசாரணை
இதனிடையே, மாணவியின் தற்கொலை தொடர்பாக பேராசிரியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாத்திமா மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தப்படுகிறது. பாத்திமா குற்றம்சாட்டிய பேராசிரியர்களிடம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை வாக்குமூலத்தையும் பெற்றிருக்கிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications