தென்னிந்தியாவிலேயே முதல்முறை.. மிரட்ட வரும் அசுரன்.. சென்னை போக்குவரத்து போலீஸ் செய்யும் மேஜிக்!
சென்னை: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை துல்லியமாக கண்டுபிடித்து அபராதம் விதிக்க 360 டிகிரியில் சுழலும் அதிநவீன ஏஎன்பிஆர் கேமரா வசதியுடன் கூடிய 2டி ரேடார் அமைப்புள்ள வாகனத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை சேர்த்துள்ளது.
தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக வடசென்னையில் இப்படி ஒரு வாகனத்தை சென்னை மாநகர போலீசார் அறிமுகம் செய்துள்ளார்கள்.

சென்னை மாநகரில் போக்குவரத்து போலீசார் விபத்துக்களையும் தடுக்கவும், உயிரிழப்புகளையும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார்கள். விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கண்காணிப்பு கேமரா மூலம் படம் பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். இதேபோல் சென்னைவாசிகளின் ட்விட்டர் பதிவுகள் வாயிலாகவும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
இதேபோல் சென்னை அண்ணா நகரில் முக்கிய 5 சந்திப்புகளில் டிராஸ் என்ற கேமரா வைக்கப்பட்டு அது எடுத்து அனுப்பும் புகைப்படம் மூலமும் அபராதத்தை போலீசார் விதிக்கிறார்கள். மேலும், ஸ்பென்சர், ஈகா சந்திப்பு மற்றும் மின்ட் சந்திப்பு ஆகிய 3 இடங்களில் டிராஸ் கேமரா பொருத்த போகிறார்கள்.
இதேபோல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள். ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்துபயணிப்பவர்கள், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்கள், சிக்னலில் நிறுத்த குறியீட்டைதாண்டி சாலையில் வாகனத்துடன் நிற்பவர்கள், ஒருவழிப்பாதையில் வாகனத்தில் செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்கள், வாகனத்தை வைத்து ரேஸில் ஈடுபடுபவர்கள் உள்பட பல்வேறு வகையான போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் சென்னை முழுவதும் ஏஎன்பிஆர் (Automatic Number-Plate Recognition) எனப்படும் அதிநவீன தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
இந்த ஏஎன்பிஆர் கேமராக்கள் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் எண்களை துல்லியமாக படம்பிடித்து அதை போக்குவரத்து போலீஸாருக்கு அனுப்பி வைக்கும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு விதிமீறும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கே போலீஸார் அனுப்பி வைப்பார்கள். அத்துடன் அபராத செலானையும் இணைத்து அனுப்பி விடுவார்கள்.
இப்படி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்த காரணத்தால் சென்னையில் விபத்துக்கள் கணிசமாக குறைந்துள்ளன. சென்னை போலீசார் வெறும் கேமராக்களை வைத்து மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள் யார் புகார் கூறினாலும் அதை ஆராய்ந்து, சிசிடிவி கேமராக்களை பார்த்து நடவடிக்கை எடுத்து அதனை ட்விட்டரில் பதிவிடுகிறார்கள். அதனை பார்த்து பலரும் விதிமீறல்களை புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள். இதன் காரணமாக விதிமீறலில் ஈடுபடுவதும் கணிசமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை துல்லியமாக கண்டுபிடித்து அபராதம் விதிக்க 360 டிகிரியில் சுழலும் அதிநவீன ஏஎன்பிஆர் கேமரா வசதியுடன் கூடிய 2டி ரேடார் அமைப்புள்ள வாகனத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை சேர்த்துள்ளது. தென்னிந்தியாவிலேய முதல்முறையாக வடசென்னையில் இந்த வாகனம் நிறுவப்பட உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications