சென்னையில் இன்று 'நிழல் இல்லை' நிஜம் மட்டும் தான்.. அபூர்வமான பூஜ்ய நிழல் நாளை ரசித்த மக்கள்
சென்னை: சென்னையில் இன்று நிழல் இல்லாத நாள் அதாவது பூஜ்ய நிழல் நாள் என்ற அபூர்வம் நிகழ்ந்துள்ளது.
பொதுவாக, சூரியனால் உருவாகும் ஒரு பொருளுடைய நிழல் சூரிய உதயத்தில் அதிக நீளமாக இருக்கும். இந்த நிழலானது வெயில் அதிகமாக ,அதிகமாக நீளத்தில் குறைந்து கொண்டே வரும். உச்சி வேளையில் மிகக்குறைந்து, பின் மீண்டும் சூரியன் மறையும் வரை வளர்ந்து அதிகமாகிக் கொண்டே இருக்கும்.
ஆனால், ஓர் வருடத்தின் இரண்டு நாட்களில் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளுக்கு மிகச் சரியாக கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலைக் உச்சி மதிய வேளையில் கூட பார்க்க முடியாது. அந்த நாளைத்தான் நிழல் காண முடியாத நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என அழைக்கிறார்கள்.

நீண்ட பகல்
நம் இருக்கும் பூமி, தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனை,நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. பூமியின் அச்சானது சூரியனைச் சார்ந்து 23.45 டிகிரி கோணத்தில் சாய்வாக சுற்றுகிறது. இந்த சுற்றுப் பாதையின் போது பூமியானது வருடத்தின் இரண்டு நாட்களில் தன் வட மற்றும் தென்மண்டலப் பகுதிகளில் நீண்ட பகலையும் நீண்ட இரவும் ஏற்படும்.

நிழல் இல்லா நாள்
அப்படி ஒரு பூஜ்ய நிழல் நாள் தான் இன்று இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் 12:07 மணிக்கும், அதே போல் கர்நாடகவில் பெங்களூரில் 12:17 க்கும், மங்களூரில் 12:27 க்கும் இந்த பூஜ்ஜிய நிழல் நாள் நிகழ்வு நடந்துள்ளது.

பருவநிலை மாற்றம்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ய நிழல் நாளை காண இன்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபூர்வ நிகழ்வு குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமும் விஞ்ஞானிகள் அளித்தனர். வருடத்துக்கு இருமுறை மட்டுமே நடக்கும் இந்த நிழல்லா நாள் காரணமாக பூமியின் பருவநிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆர்வத்துடன் சோதனை
இதனிடையே பல இடங்களில் மாணவர்கள் இன்று நிழல் இல்லாத நாள் ஏற்படும் எனபதை அறிந்து அதனை சில பொருட்களை வைத்து ஆர்வத்துடன் சோதனை செய்து பார்த்தனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications