கைவிட்ட பருவ மழை.. வறண்டு வரும் சென்னை ஏரிகள்.. கோடைகாலம் கொடுமையாக இருக்குமோ?!
சென்னை: வட கிழக்குப் பருவ மழை இந்த முறை சென்னையைக் கைவிட்டது போலத் தெரிகிறது. மழை பெய்து ஏரிகள் நிரம்பினால்தான் சென்னை குடிநீர்ப் பிரச்சினையிலிருந்து தப்ப முடியும் என்பதால் இந்த கோடை காலம் மிகக் கொடுமையாக இருப்பதற்கான வாய்ப்புகளை புறம் தள்ள இயலவில்லை.
தமிழகத்தில் இந்த முறை வட கிழக்குப் பருவ மழை பெரிய அளவில் பெய்யவில்லை. பற்றாக்குறைதான். ஒரு புயல் வந்தது. அந்தப் புயல் மக்களின் வாழ்வாதாரத்தைத் துடைத்துப் போட்டு அழித்துச் சென்றதே தவிர மக்களுக்கு சந்தோஷம் தரவில்லை.
சென்னையைப் பொறுத்தவரை நிலத்தடி நீர் பாதாளத்துக்குப் போய் பல காலமாகி விட்டது சுற்றிலும் உள்ள சில ஏரிகளை நம்பித்தான் குடிநீர் தேவைகள் உள்ளன. எனவே மழை பெய்து இந்த ஏரிகள் நிரம்பினால்தான் சென்னை வறண்டு போகாமல் தவிர்க்க முடியும். ஆனால் நிலவரம் கலவரம் தருவதாக உள்ளது.

குடிநீர் தரும் 4 ஏரிகள்
சென்னை மாநகரம் தனது குடிநீர்த் தேவைக்காக நம்பியிருப்பது நான்கு ஏரிகளை. சோழவரம், பூண்டி, செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம். இதில் பூண்டியும், செம்பரம்பாக்கமும் பெரியவை.

மழை பொய்த்தது
மழை உரிய நேரத்தில் பெய்தால்தான் இந்த ஏரிகளில் நீர் நிரம்பும். அதை வைத்துத்தான் சென்னை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும். ஆனால் இந்த ஆண்டு பருவ மழை இயல்பு நிலையில் இல்லாமல் போனதால் நிலைமை கவலை தரும் வகையில் உள்ளது.

நீர் இருப்பு நிலவரம்
இன்றைய தேதிப்படி பூண்டியில் 353 மில்லியன் கன அடி நீர் (முழுக்கொள்ளளவு 3231) இருப்பு உள்ளது. சோழவரம் 48 (1081), செங்குன்றம் 1041 (3300), செம்பரம்பாக்கம் 133 (3645) மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

கவலை தரும் நிலவரம்
நான்கு ஏரிகளிலும் மொத்தம் 11,257 மில்லியன் கன அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஆனால் தற்போது நீர் இருப்பானது வெறும் 1575 மில்லியன் கன அடி தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் இங்கு 5183 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. இதனால் கடந்த ஆண்டு கோடை காலத்தை ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது.

மழை வராவிட்டால்
டிசம்பர் 31ம் தேதி வரை வட கிழக்குப் பருவமழைக்காலம் உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் பெரிய அளவுக்கான மழை இருக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே வரும் கோடை காலத்தில் சென்னையின் குடிநீர் தேவை மிகப் பெரிய கவலை தரும் அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறுகிறார்கள்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது












Click it and Unblock the Notifications