14 சவரன் தங்க நகைகள்.. குத்தகைதாரரின் சேலையை பிடித்திழுத்த ஹவுஸ் ஓனர்.. சென்னையில் யாரிந்த பெண்?
சென்னை: வீட்டை காலி செய்ய சொல்லியதுடன், பெண்ணையும் தாக்கி அவமானப்படுத்தியிருக்கிறார்கள் வீட்டின் உரிமையாளர்கள்.. இது சம்பந்தமான போலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரம் சென்று, 2 பேர் கைதாகும் நிலைமையும் வந்துள்ளது.. என்ன நடந்தது?
காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை நுங்கம்பாக்கம், மேற்கு மாட வீதியில் உள்ள வீட்டில் நிரோஷா (38) என்பவர் குடும்பத்துடன் குத்தகைக்கு வசித்து வருகிறார். நிரோஷா 2013ம் ஆண்டு முதல் மேற்படி வீட்டின் உரிமையாளர் யசோதா என்பவரிடம் பணம் ரூ.15 லட்சம் பணம் கொடுத்து குத்தகைக்கு வசித்து வருகிறார்.

வியாபாரம்: வீட்டு உரிமையாளர் யசோதாவின் மகள் மற்றும் மருமகனுக்கு வியாபாரத்தில் பணம் தேவைப்படுவதாக யசோதா கேட்டதன்பேரில், நிரோஷா 2014ம் ஆண்டு முதல் பல தவணைகளாக மொத்தம் ரூ.23.5 லட்சம் பணம் கடனாக கொடுத்துள்ளதாகவும், மேலும் உரிமையாளர் யசோதாவின் பேத்திக்கு 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றபோது கடனாக பணம் கேட்டபோது, 13 ¼ சவரன் தங்க நகைகள் கொடுத்ததாகவும் நிரோஷா புகார் அளித்துள்ளார்
மேலும், சமீபத்தில் யசோதா மற்றும் அவரது குடும்பத்தினர் நிரோஷாவை வீட்டை காலி செய்ய சொல்லியிருக்கிறார்கள். அப்போது, நிரோஷா வீடு குத்தகை பணம் மற்றும் கடனாக கொடுத்த பணம் என மொத்தம் ரூ.38.5 லட்சம் பணத்தையும், கடனாக கொடுத்த 13 ¼ சவரன் தங்க நகையையும் திரும்ப தருமாறு கேட்டுள்ளார். இதனை தருவதாக ஒப்புக்கொண்டு, பின்னர் சில நாட்கள் கழித்து யசோதா வீட்டினர் நிரோஷாவிடம் பணம் தரமுடியாது,உன்னை எப்படி காலி செய்ய வைக்கனும் என தெரியும் என்று கூறி சென்றிருக்கிறார்கள்.
நிரோஷா: அத்துடன், கடந்த 30.01.2025 அன்று மதியம் நிரோஷா மேற்படி வீட்டில் தனியாக இருந்தபோது, யசோதாவின் மகன் குமார் மற்றும் குமாரின் மனைவி லதா ஆகியோர் மேலும் சில நபர்களுடன், நிரோஷாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, நிரோஷாவை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசி, அவரது சேலையை பிடித்து இழுத்து அவமானபடுத்தியுள்ளனர். வீட்டிலிருந்த பொருட்களை எடுத்து வந்து வெளியே போட்டு, வீட்டை பூட்டிவிட்டும் சென்றுள்ளனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் நிரோஷா F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதிரடி கைது: நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் தொடர்புடைய சுந்தரம் மகன் குமார்(52) மற்றும் இவரது மனைவி லதா(47) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications