கூவம் ஆற்று வெள்ளத்தில்.. பைக்குடன் அடித்து செல்லப்பட்ட நபர்.. கதி என்ன?.. தீவிர தேடுதல் வேட்டை!
சென்னை: மதுரவாயல் தரைப்பாலத்தில் ஓடிய வெள்ளத்தில் பைக்குடன் அடித்து செல்லப்பட்ட நபரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது.
Recommended Video
இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மதுரவாயலில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்திலும் வெள்ள நீர் செல்வதால் அந்த தரைப்பாலம் மூடி வைக்கப்பட்டுள்ளது.

பைக்குடன் அடித்து செல்லப்பட்டார்
நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தரைப்பாலத்தை கடக்க முயன்றனர். அப்போது வெள்ளத்தில் வேகத்தில் இருவரும் சிக்கினார்கள். அதில் அதில் மோட்டார் சைக்கிள் பின்புறம் அமர்ந்திருந்த நபர் அங்கிருந்த கம்பியை பிடித்து தப்பித்தார். ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர் மோட்டார் சைக்கிளுடன் நீரில் அடித்து செல்லப்பட்டார்.

தடுப்பை மீறி...
மழை நின்று பத்து நாட்களாகியும் நீரின் வேகம் குறையாததால் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாலத்தை மூடி வைத்திருந்தனர். ஆனால் இருவரும் தடுப்பை மீறி சென்றதால் விபத்து ஏற்பட்டது. அந்த நபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேடுதல் பணி
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டவர்களை தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை குறித்த அடையாளம் தெரியாததால் தேடுதல் பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டு வருகிறது இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர் சம்பவம்
மதுரவாயல் கூவம் ஆற்றில் தரைப்பாலத்தில் இதேபோல் கடந்த வாரம் ஒரு நபர் அடித்து சென்று மீட்கப்பட்டார். மேலும் ஒருவர் அடித்து செல்லப்பட்டு இறந்து போனார். தொடர்ந்து இதேபோல் நிகழ்ந்து யாரும் நிலையில் அஜாக்கிரதையால் மீண்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications