Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமா பார்த்துட்டாரு.. கரெக்ட்டா "வளையல்" போடும்போது.. சென்னை மாங்காட்டில் கள்ளக்காதல் ஜோடி அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெஞ்சிலேயே தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முடியுமா? இதுதான் மாங்காடு போலீசாரின் முதல் சந்தேகமாக வலுத்தது.

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில், ஒரு அப்பார்ட்மென்ட் கட்டப்பட்டு வருகிறது.. இது தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு ஆகும்.. மிகப்பெரிய அப்பார்ட்மென்ட் என்பதால், வடமாநில தொழிலாளர்களும் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Chennai Mangadu incident and do you know who is this North India young woman what happened to his husband

கட்டிட வேலைகள்: இதற்காகவே, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் குடும்பமாக வந்துள்ளார்கள்.. இங்கேயே தங்கியிருந்து கட்டிட வேலைகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோனியா என்பவர், மாங்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தார்.. சோனியாவுக்கு 33 வயதிருக்கும்.

கொலை: தன்னுடைய கணவர் மோகன் புஜக்கர் (38), வீட்டில் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் சொன்னார்.. இதனால், மாங்காடு போலீசாரும், மோகன் வீட்டிற்கு விரைந்து சென்றார்கள்.. அங்கிருந்த மோகன் புஜக்கர் சடலத்தையும் மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

இதற்கு பிறகு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.. ஆனால், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மோகனுக்கு யார் யார் விரோதிகள்? என்ன காரணத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்? என்பதெல்லாம் உடனடியாக தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. அதில், மோகனுக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டிருப்பதால், யாரோ கத்தியால் குத்தியே கொன்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது..

சந்தேகம்:
இதற்குபிறகுதான், போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்கினார்கள்.. முதல் சந்தேகமே, மனைவி சோனியா மீது போலீசாருக்கு திரும்பியது. சோனியாவை கண்காணிக்கும்போது, மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுசாந்தா பர்மன் என்பவர் மீதும் சந்தேகம் வலுத்தது.. இதையடுத்து, சோனியா + சுசாந்தா இருவரையும் பிடித்து விசாரித்தார்கள். அப்போதுதான் உண்மை வெளிவந்தது.

மோகன், சோனியா இருவரும் தங்கி வேலை செய்து வந்தநிலையில், சோனியாவிற்கும், சுசாந்தா பர்மன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அதுவே கள்ளக்காதலாக மாறியிருக்கிறது..

கள்ளக்காதல்:
இதற்கு பிறகு, சோனியாவை பார்ப்பதற்காக சுசாந்தா, அடிக்கடி வீட்டிற்கும் வந்து சென்றுள்ளார்.. மோகனுக்கு இந்த விஷயம் தெரிந்து, சோனியாவை கண்டித்துள்ளார்.. ஆனால், சோனியா, சுசாந்தா இருவருமே மோகனின் பேச்சை கண்டுகொள்ளவில்லை.. சம்பவத்தன்றும், சோனியாவை பார்க்க சுசாந்தா வந்துள்ளார்..

அப்போது, சோனியாவிற்கு அவர் வளையல் அணிவித்துள்ளார். அப்போதுதான், மோகன் அங்கு கரெக்ட்டா உள்ளே நுழைந்துள்ளார்.. தன்னுடைய மனைவிக்கு சுசாந்தா வளையல் போட்டதை பார்த்து ஆவேசமானார்..

Chennai Mangadu incident and do you know who is this North India young woman what happened to his husband

திடீரென உள்ளே நுழைந்த மோகன், கள்ளக்காதல் ஜோடியின் அட்டகாசத்தை பார்த்து அதிர்ந்து போனார்.. பிறகு, மோகனுக்கும், சுசாந்தாவுக்கும் கடுமையான வாக்குவாதத்தில் நடந்துள்ளது.. இதில், ஆவேசமடைந்த சுசாந்தாபர்மன், தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மோகனின் மார்பில் சரமாரியாக குத்திக்கொன்றுவிட்டார்..

பரபரப்பு: கணவன் கண்ணெதிரே இறப்பதை பார்த்தபிறகுதான், சோனியா போலீசுக்கு ஓடிவந்து நாடகமாடியது தெரியவந்தது. இப்போது இந்த கள்ளக்காதல் ஜோடி ஜெயிலில் உள்ளது.. பிழைப்புக்காக வந்தஇடத்தில் நடைபெற்ற இந்த, கள்ளக்காதல் + கொலை + கைது சம்பவங்கள் மாங்காட்டை அதிரடி வைத்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+