களைகட்டிய கிரிக்கெட் போட்டி.. திமுக மகளிர் அணியிடம் தோல்வி அடைந்த சென்னை மேயர் பிரியா அணியினர்!
சென்னை: சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையிலான கிரிக்கெட் அணி, திமுக மகளிர் அணியிடம் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தது.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 14 ஆம் தேதி இந்த கிரிக்கெட் போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.

இந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் ஒரு அணியும், மகளிர் தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச் சூழல் அணிகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு அணிகளாக களமிறங்கினர். இந்த முதலமைச்சர் பிறந்தநாள் சிறப்பு கிரிக்கெட் போட்டிக்காக சென்னை மேயர் பிரியா கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார்.
மொத்தமாக 4 மகளிர் அணிகளும், 16 ஆடவர் அணிகளும் என 20 அணிகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் திமுக மகளிர் அணி - மேயர் பிரியா தலைமையிலான அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை மேயர் பிரியா தலைமையிலான அணி தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளைச் சேர்ந்தவர்களுக்கு திமுக எம்.பி தயாநிதி மாறன் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ஒரு லட்சம், இரண்டாம் பரிசு 75 ஆயிரம் ரூபாய், மேன் ஆப்தி மேட்ச், மேன் ஆப்தி சீரிஸ் என்று பல பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அதே போல மகளிர் அணியில் 4 அணிகள் போட்டியிடுகின்றன. அதில் முதல் இடத்தை பெறும் அணிக்கு ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் மற்றும் ஸ்கூட்டி என்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications