சென்னை மருத்துவக் கல்லூரி டீனுக்கு கொரோனா?.. மருத்துவ விடுப்பில் சென்றதால் பரபரப்பு
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவற்றில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிகளவிலான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அதிகளவில் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீனாக இருந்தவர் ஜெயந்தி. ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு டீனாக இருந்த இவர் தலைமையில் அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5 மைக்ரோ பிளான்.. ராதாகிருஷ்ணன் களமிறக்கும்
நோய் எதிர்ப்பு சக்தி
அது போல் இவர் தலைமையிலான குழுவினரின் ஆலோசனையின் பேரில் கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. சிகிச்சை ஒரு புறமிருந்தாலும் இந்த உணவால் ஏராளமானோர் கொரோனாவில் இருந்து குணமடைவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் என 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தொற்று உறுதி
அது டீன் ஜெயந்திக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை.
நியமனம்
இதையடுத்து கடந்த 12-ஆம் தேதி ஜெயந்தி மருத்துவ விடுப்பில் செல்வதாக தொலைபேசி மூலம் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில் ஜெயந்திக்கு பதிலாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் புதிய டீனாக கல்லீரல் நிபுணர் மற்றும் பேராசிரியருமான மருத்துவர் நாராயணசாமியை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
டீன் மருத்துவ விடுப்பு
இந்த மருத்துவமனையில் பணியாற்றும் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது டீனும் கொரோனா பாதிப்பால் மருத்துவ விடுப்பில் சென்றதாக கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது அதிமுக எம்எல்ஏ பழனிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.