தென் மேற்கு பருவகாற்றில் மாறுபாடு - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா
தென் மேற்கு பருவகாற்றில் ஏற்பட்டுள்ள திசை வேக மாறுபாட்டின் காரணமாக நீலகிரி,கோவை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள
சென்னை: தென் மேற்கு பருவகாற்றில் ஏற்பட்டுள்ள திசை வேக மாறுபாட்டின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி,நாமக்கல் ,கரூர் ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி,கோவை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் இடியோடு கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் மழை குறைவான அளவே பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயிலும் இரவில் மழையும் பெய்கிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளுமை பரவி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா,பந்தலூர் தலா 9 சென்டிமீட்டர் ,கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர்அலுவலகம்,சின்னக்கல்லார்,நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி தலா 7️ சென்டிமீட்டர் மீட்டர் மழையும்,நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார்,கோவை மாவட்டம் வால்பாறை,சோலையார், தலா 5 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் மேல் பவானி, சின்கோனா தலா 4️ சென்டிமீட்டர்,நீலகிரி மாவட்டம் நடுவட்டம்,எமரால்டு,கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கள் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
அடுத்த 48 மணிநேரத்திற்கு எங்கெங்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் தென் மேற்கு பருவகாற்றில் ஏற்பட்டுள்ள திசை வேக மாறுபாட்டின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி,நாமக்கல்,கரூர்,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நீலகிரி,கோவை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை ஜூலை 18ஆம் தேதி வட கடலோர மாவட்டங்கள்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் .
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஜூலை 18ஆம் தேதி வடக்கு அரபிக்கடல், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளிலும்,கர்நாடகா, கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 18 முதல் ஜூலை 22 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications