இன்று முதல் தனியார் மயமாகிறது சென்னையின் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்
சென்னை: சென்னையில் 9 மெட்ரோ ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு நிலையப் பொறுப்பாளர்கள், ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
சென்னையில் தற்போது முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவை 45 கிலோமீட்டர் துரத்துக்கு பயன்பாட்டில் உள்ளது. இதில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளது. இதில் காலை, மாலை, இரவு என மூன்று ஷிப்ட்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

இந்நிலையில் இன்று முதல் சென்னை அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பா, கீழ்பாக்கம், நேரு பார்க், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை மற்றும் நந்தனம் ஆகிய 9 மெட்ரோ ரயில் நிலையங்களையும் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு நிலையப்பொறுப்பாளர்களாக ஒப்பந்த ஊழியர்களே இந்த 9 மெட்ரோ ரயில் நிலையங்களில் நியமிக்கப்பட உள்ளார்கள். இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதுஇனி செயல்படுவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மெட்ரோ ரயில் நிலையத்தில் நிலைய கட்டுப்பாட்டாளராக உள்ள நிரந்தர பணியாளர்கள் அனைவரும், வரவு செலவு கணக்குகள், முக்கியமான அறைகளுக்கான சாவிகள், கணினிகள் மற்றும் தங்கள் வசம் உள்ள பொறுப்புகளை புதிய பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தி உள்ளது.
மெட்ரோ ரயில் இயக்குபவர், டிக்கெட் வழங்குபவர், நிலைய பரிசோதகர், பாதுகாப்பு பணிகளில் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் முக்கிய பொறுப்பான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் பொறுப்பும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் அரசு ஊழியர் அந்தஸ்தில் உள்ள நிரந்தர பணியாளர்கள் இனி தங்கள் நிலை என்னவாகும் என அச்சத்தில் உள்ளார்கள்.
இதனிடையே சென்னை மெட்ரோ அதிகாரிகள் வெளியிட்ட விளக்கத்தில், குறிப்பிட்ட பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால் ஒப்பந்தஊரியர்களை நியமிக்க உள்ளோம். அரசு ஊழியர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. அவர்கள் எந்த ரயில் நிலையத்தில் எந்த பணியை செய்தார்களோ, அந்த பணியை செய்வார்கள். எனவே அரசு ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications