இன்று 9 நிமிடம் அல்ல! வெறும் 7 நிமிடங்கள்தான்! செம ஆஃபர்! மகிழ்ச்சியில் மெட்ரோ ரயில் பயணிகள்!
சென்னை: சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் மெட்ரோ ரயில் நிறுவனம் 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயிலை இயக்குவதாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே மின்சார ரயில்களுக்கு பதிலாக மேற்கண்ட வழித்தடங்களில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குவதாக அறிவித்துள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது ப்ளூ லைன் என அழைக்கப்படும் ஒரு வழித்தடத்தில் விம்கோ நகர் டெபோவிலிருந்து சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, கிண்டி, மீனம்பாக்கம், சென்னை சர்வதேச விமான நிலையம் வரை 9 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
மற்றொரு வழித்தடம் பச்சை லைன் என அழைக்கப்படுகிறது. இது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இயக்கப்படுகிறது. பர்பிள் லைன் எனப்படும் மூன்றாவது வழித்தடம் மாதவரம் பால் பண்ணையிலிருந்து சிறுச்சேரி சிப்காட் வரை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
அது போல் ஆரஞ்ச் லைன் எனப்படும் 4ஆவது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை இயக்கப்படுவதற்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. அது போல் சிவப்பு லைன் எனப்படும் 5ஆவது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணையிலிருந்து சோளிங்கநல்லூர் வரை மெட்ரோ இயக்குவதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
மெட்ரோ ரயில்கள் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. இதனால் மெட்ரோ நிறுவனமும் பயணிகள் வசதிக்காக பல அறிவிப்புகளை வெளியிடுகிறது. அதாவது இன்று சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகளுக்காக 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதனால் பொதுமக்களின் இன்னலை துடைக்க வருகிறது மாநகர பேருந்து. மேற்கண்ட வழித்தடத்தில் 150 பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயிலும் மக்களுக்கு கை கொடுக்கிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை கடற்கரை டூ தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் இன்றைய தினம் மெட்ரோவில் பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும். பொதுவாக நீலம் மற்றும் பச்சை லைன்களில் பகல் 12 மணி முதல் 8 மணி வரை அதிக ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 7 நிமிட இடைவெளியில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை என காலை 5 மணி முதல் 10 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை என இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் இந்த ரயில் நேரங்களுக்கு ஏற்ப தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications