Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கே "இடி".. இரவெல்லாம் சேட்டை.. பக்கத்துல அந்தம்மா.. எங்காவது நடக்குமா? சிக்கினது யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெறும் 15 வயசுதான் ஆகிறது இந்த பெண்ணுக்கு.. இந்த 15 வயதிலேயே இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய முடியுமா? இதற்கெல்லாம் துணிச்சல் வருமா? என்று சென்னையே அதிர்ந்துபோய் கிடக்கிறது.

மன்னார்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. 22 வயதாகிறது.. சென்னை போரூர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.. இவர் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. அந்த பெண்ணுக்கு 15 வயதுதான் ஆகிறது.

Chennai Mogappair incident and Do you know who the 15-year-old girl and her boyfriend are

இருவருமே காதலித்துள்ளனர்.. 6 மாதத்துக்கு முன்பு, போரூரில் உள்ள விநாயகர் கோயிலுக்கு, சிறுமியை அழைத்து சென்று, தாலியும் கட்டிவிட்டார் இளைஞர்.. பிறகு, தன்னுடைய சொந்த ஊரான திருவாரூர், மன்னார்குடிக்கு சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.. இதனிடையே சிறுமியை காணாமல், அவரது பெற்றோர் பதறிவிட்டனர். பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், வளசரவாக்கம் மகளிர் போலீசில் புகார் தந்தனர்..

மன்னார்குடி: இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை நடத்தியபோதுதான், மன்னார்குடிக்கு சிறுமி கடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. பிறகு, மன்னார்குடிக்கு விரைந்த போலீஸ், அந்த ஜோடியை மீட்டுக் கொண்டு வந்துள்ளது..

அத்துடன், சிறுமியை இனிமேல் தொந்தரவு செய்யக்கூடாது என்று, அந்த இளைஞருக்கு வார்னிங்கையும் தந்து அனுப்பி வைத்த போலீஸார், சிறுமியையும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த இளைஞர், போரூரிலிருந்து, முகப்பேர் பகுதிக்கு வீட்டை மாற்றிக்கொண்டு சென்றுவிட்டார்

அதேபோல, சிறுமியை கூடுதலாக பார்த்து கொள்ளும்பொறுப்பை, அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்றோர்கள் வீட்டில் இல்லாவிட்டாலும்கூட, பாட்டிதான் சிறுமியை, கவனித்து கொள்ள நேரிட்டது.. ஆனால், இவ்வளவு நடந்தும்கூட, இந்த காதல் ஜோடி திருந்தவில்லை.. திருட்டுத்தனமாக சந்தித்து பேசி வந்துள்ளது.. அதிலும் இந்த சிறுமி, தன்னுடைய வீட்டுக்கு தெரியாமல், இளைஞரை தேடி சென்று பேசிவந்துள்ளார்..

அம்மா, பாட்டி: அதுமட்டுமல்ல, கடந்த சில நாட்களாகவே, சிறுமி தன்னுடைய அம்மாவுக்கும், பாட்டிக்கும், தூக்க மாத்திரை கலந்து தினமும் இரவில் தந்து வந்துள்ளார்.. இது தெரியாமல், இருவருமே அந்த பாலை வாங்கி குடித்து வந்துள்ளனர்.. பாலை குடித்ததுமே 2 பேருக்கும் தூக்கம் வந்துள்ளது.. அத்துடன் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரமும் அசந்து தூங்கியிருக்கிறார்கள்.

எப்போதும் இல்லாமல், திடீரென ஏன் இவ்வளவு தூக்கம் வருகிறது? காலை நேரத்தில் உடனடியாக படுக்கையைவிட்டு, எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு உடலில் வலி ஏற்படுகிறதே? என்று பாட்டிக்கும், அம்மாவுக்கும் சந்தேகம் வந்தது. அப்போதுதான், சிறுமி மீது சந்தேகம் வந்துள்ளது.. அதனால், சிறுமி வீட்டில் வைத்திருந்த, பையை ரகசியமாக சோதனை செய்திருக்கிறார்கள்.. அதில், ஏராளமான மாத்திரைகள் இருப்பதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

Chennai Mogappair incident and Do you know who the 15-year-old girl and her boyfriend are

மாத்திரைகள்: ஆனால், அது என்ன மாத்திரைகள் என்று தெரியாததால், அவைகளை கொண்டுபோய், மெடிக்கல் ஷாப்பில் காண்பித்து, இது என்ன மாத்திரை என்று கேட்டார்கள்.. தூக்க மாத்திரை என்று மெடிக்கல் ஷாப்பில் சொல்லவும், பாட்டியும், அம்மாவும் பதறிப்போய்விட்டனர்.. அதற்கு பிறகுதான், சிறுமியிடம் இதைப்பற்றி கேட்டிருக்கிறார்கள். இந்த மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்டதற்கு, காதலன் வாங்கி கொடுத்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, பெற்றோருக்கு தெரியாமல், சிறுமிக்கு செல்போனும் வாங்கி தந்திருக்கிறார் அந்த காதலன்.. அதை வைத்துதான், மறுபடியும் காதலை நீட்டித்துள்ளது தெரியவந்துள்ளது.

அடுத்த ஷாக்: இதில் இன்னொரு அதிர்ச்சியும் வெளிவந்தள்ளது.. இரவு நேரத்தில், தினமும் தனிமையில் இருக்க இந்த ஜோடி ஆசைப்பட்டுள்ளது. அதற்காகவே, மெடிக்கல் ஷாப்பில் தூக்க மாத்திரைகளை வாங்கிய காதலன், அதை சிறுமியிடம் தந்து, நைட் நேரத்தில், அம்மா, பாட்டிக்கு பாலில் கலந்து கொடு, அவர்கள் தூங்கிய பிறகு நாம் 2 பேரும் தனிமையில் ஜாலியாக இருக்கலாம் என்று சொன்னாராம்.

காதலன் சொன்னபடியே, தினமும் இரவில் தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து 2 பேருக்கும் சிறுமி தந்துள்ளார். பாட்டியும், அம்மாவும் அசந்து தூங்கிய பிறகு, காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளார்.. நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு காரியத்தை இவர்கள் செய்திருக்கிறார்கள்..

பகீர் சென்னை: இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அந்த இளைஞர் மீண்டும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். அம்மா, பாட்டிக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க வைத்துவிட்டு, காதலனுடன் சிறுமி தினமும் உல்லாசமாக இருந்த சம்பவம் சென்னையையே அதிர வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+