Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாப்ல பஸ்ஸ நிறுத்தலையா? அப்போ உடனே இதை பண்ணுங்க.. சென்னைவாசிகளுக்கு எம்டிசியின் ஜில்ஜில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பொதுப் போக்குவரத்துக்காக சென்னைவாசிகள் அதிகமானோர் மாநகர போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், உரிய நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்துவதில்லை என பயணிகள் குறைகூறி வருகின்றனர். இந்நிலையில் அதற்கான தீர்வை காணும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது சென்னை மாநகர போக்குவரத்து கழகமான எம்டிசி.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சென்னை மாநகரம் திணறி வருகிறது. மக்கள் தொகையோடு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போக்குவரத்தின நெரிசல் அதிகரித்து வருகிறது.

Chennai MTC announced that a complaint can be filed if buses are not stopped at bus stops

இதன் காரணமாக சென்னைவாசிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையானது வழங்கப்படுகிறது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் : மெட்ரோ ரயில் சேவையும் மின்சார ரயில் சேவையும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைப்பது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தான். அந்த வகையில் அரசு பேருந்துகள் சென்னை நகரில் பல்வேறு பகுதிகளை இணைக்கிறது. நாளொன்றுக்கு 2500 பேருந்துகள் சென்னை நகரில் சாலைகளில் பயணிக்கின்றன. இவற்றில் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணிப்பதாக கூறப்படுகிறது.

கடும் அவதி: அதே நேரத்தில் முக்கியமான நேரங்களில் பேருந்துகளை இயக்குவதில்லை நெரிசல் காரணமாக உரிய நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்வதாகவும் புகார் கூறப்படுகிறது. குறிப்பாக பீக் ஹவர்ஸ் எனப்படும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பேருந்துகளை உரிய நிறுத்தங்களில் நிறுத்தப்படாமல் செல்வதால் மக்கள் கடும் அவதியை சந்திப்பதாக புகார்கள் எழுந்தன.

Chennai MTC announced that a complaint can be filed if buses are not stopped at bus stops

முக்கிய அறிவிப்பு: இந்த நிலையில் சென்னை நகரில் வசிக்கும் அரசு பேருந்து சேவையை பயன்படுத்தும் மக்களின் குறையை தீர்க்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது சென்னை மாநகர போக்குவரத்து கழகமான எம்டிசி. அதன்படி சென்னை மாநகரில் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும் பேருந்துகள் அட்டவணை இடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும்போது புகார் அளிக்கலாம் எனவும் இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

புகார் அளிக்க எண்: அந்த வகையில் அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்லும்போது பொதுமக்கள் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பேருந்து இயக்கப்படும் நேரம் மற்றும் பேருந்து நிற்காமல் சென்ற நிறுத்தம் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் அளிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரப்பூர்வ எக்ஸ்பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+