சென்னையில் தினமும் பேருந்தில்.. பயணம் செய்கிறீர்களா? மொத்தமாக எல்லாம் மாறுது.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னையில் உள்ள சீரமைக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் தவிர மற்ற பல பேருந்து நிலையங்கள் பழுதடைந்த தளங்கள், சுகாதாரமற்ற கழிப்பறைகள், போதிய வெளிச்சமின்மை, சிசிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலை என அரசு அலட்சியத்தின் பிம்பமாக காட்சி அளிக்கின்றன. புதிதாக சீரமைக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கூட போதிய பராமரிப்பு இன்றி உள்ளது.
இந்த நிலையை மாற்றும் வகையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) தற்போது பெருநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையங்களை இயக்கி, பராமரிக்கும் பொறுப்பைத் தனியார் வசம் ஒப்படைக்கவுள்ளது. இதன்மூலம், பேருந்து நிலையங்களின் தரத்தை மேம்படுத்த சி.எம்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையங்கள்
திரு.வி.க. நகர், பெரியார் நகர், அம்பத்தூர், முல்லை நகர், கண்ணதாசன் நகர் உள்ளிட்ட இடங்களில் சி.எம்.டி.ஏ. புதிய பேருந்து நிலையங்களை அமைத்துள்ளது. திரு.வி.க. நகர், பெரியார் நகர் மற்றும் அம்பத்தூர் பேருந்து நிலையங்களை இயக்கி, பராமரிக்கும் சலுகைதாரர்களை நியமிப்பதற்கான டெண்டர்களை சி.எம்.டி.ஏ. கோரியுள்ளது.
அதேபோல், முல்லை நகர் மற்றும் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகளையும் வெளியிட்டுள்ளது. இந்த திட்டங்கள் மூன்று ஆண்டு சலுகை ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கக்கூடும்.
மாநகரின் நெரிசலைக் குறைப்பதும், வட்டார அளவிலான பேருந்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் சி.எம்.டி.ஏ-வின் வியூகத்தின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முல்லை நகரில் 0.76 ஏக்கர் பரப்பளவில், ₹7.25 கோடியில் மகா கவி பாரதி நகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்களில் தரமான வசதிகள்
சுமார் 33,120 சதுர அடி கட்டப்பட்ட பரப்பளவைக் கொண்ட இந்த நிலையம் நான்கு பேருந்துகளை நிறுத்த இடமளிக்கும். இங்கு இரண்டு சில்லறை கடைகள், உணவுக்கூடம், ஏ.டி.எம்., பாலூட்டும் அறை, கழிப்பறைகள், மாதாந்திர பயணச்சீட்டு மையம் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் போன்ற வசதிகள் உள்ளன. விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த நிலையத்தின் தினசரி செயல்பாடுகளுக்கும், பராமரிப்புக்கும் ஒரு தொழில்முறை முகமை தேவை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கவியரசு கண்ணதாசன் நகரில் 1.31 ஏக்கர் பரப்பளவில், ₹13.4 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் சுமார் 57,050 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு ஐந்து கடைகள், பயணச்சீட்டு மையங்கள், கழிப்பறைகள் மற்றும் பயணிகளுக்கான பிற வசதிகள் உள்ளன. அரசு-தனியார் பங்களிப்பு (பி.பி.பி.) மாதிரி ஒப்பந்தத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைதாரர் பராமரிப்புப் பணிகள், காலமுறை இயந்திர பராமரிப்பு, தூய்மை, பாதுகாப்பு மற்றும் வசதி மேலாண்மை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவார். பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிட கட்டணம், கடைகளுக்கான குத்தகை மற்றும் டிஜிட்டல் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டலாம். இருப்பினும், நடைமேடை அல்லது பார்வையாளர் கட்டணம் அனுமதிக்கப்படாது.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ தரப்பு கூறுகையில், "பொது போக்குவரத்து வசதிகளில் தொழில்முறை மேலாண்மை நடைமுறைகளைக் கொண்டு வருவதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதி இது. போக்குவரத்துத் துறையிடம் இருந்து தடையில்லா சான்று (NOC) பெற்றுள்ளோம. பராமரிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் இது சீராக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications