Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தை மிரட்டும் டெங்கு!சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த டெங்கு காய்ச்சல் அதிகமான அளவில் பரவி வருகிறது.

Chennai Municipal Commissioner Radhakrishnan affected for Dengue fever

டெங்கு காய்ச்சல் அதிக காய்ச்சலையும் அதிக தலைவலியையும் தொண்டை வலியையும் வாந்தியையும் ஏற்படுத்தும். அத்துடன் சிறுநீர், வாந்தி, மலத்தில் ரத்தம் வந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் என்பது ஏடீஸ் எனும் ஒரு வகை கொசுக்களால் ஏற்படுகிறது. இது காலையில் மட்டுமே கடிக்கும். இந்த கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இந்த நோயின் தாக்கம் அதிகமானால் உயிரிழப்பை கூட ஏற்படுத்தும். எனவே அதீத காய்ச்சல், தொடர்ந்து 4 அல்லது 5 நாட்களுக்கு விட்டுவிட்டு காய்ச்சல் வந்தாலோ அல்லது உடலில் ஏதேனும் படை போல் இருந்தாலோ உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.

அந்த வகையில் தற்போது சென்னா மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டார்.

அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக சொல்கிறார்கள். விரைவில் அவர் பணிக்கு திரும்புவார் என தெரிகிறது.

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கால்நடை மருத்துவராவார். இவர் கும்பகோணம் தீவிபத்து, சுனாமி, மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களின் போது பாதிப்புகளை கட்டுக்குள் வைக்கும் அளவுக்கு செயல்படுவார். இவர் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த போது உலகையே ஆட்டி படைத்த கொரோனா தமிழகத்தை விட்டுவைக்கவில்லை.

தமிழகத்தில் முதல் அலை, இரண்டாவது அலைகளில் குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புகளும் குறைந்த உயிரிழப்புகளும் ஏற்பட ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள் மிகவும் முக்கியத்துவம். வெளிமாநிலங்களில் கொரோனாவுக்கு நிறைய பேர் பலியான நிலையில் தமிழகத்திலோ விமான நிலையம், ரயில் நிலையம், பஸ்நிலையம் என ஒவ்வொரு இடங்களிலும் ராதாகிருஷ்ணன் சோதனை நடத்தி கொரோனா மேலும் பரவாமல் பார்த்துக் கொண்டார்.

அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கூட கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டார். தற்போது டெங்கு காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+