Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரவணபவன் இருந்த 300 கோடி நிலம்.. சென்னையில் வரும் பிரம்மாண்ட மெட்ரோ பார்க்கிங் வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நிலத்தை அரசு கையகப்படுத்த தீர்ப்பு வந்தது.இதையடுத்து கடந்த அக்டோபர் 28ம் காலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து கட்டடத்தில் செயல்பட்ட சரவணபவன் ஹோட்டல் ஊழியர்களை வெளியேற்றிய அதிகாரிகள், அதை அகற்றினார்கள். அங்கு சுமார் 40,000 அடியில் நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கான பார்க்கிங் வரப்போகிறது.

சென்னையில் ஆலந்தூர் பரங்கிமலை மீனம்பாக்கம் வரை உள்ள பகுதிகளில் பார்க்கிங் செய்வதற்கு உகந்த நிலங்களோ பெரிய அளவிலான அரசுக்கு சொந்தமான நிலங்களோ இல்லை. அப்படி உள்ள ஒரு சில மிகப்பெரிய நிலங்கள் தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. இந்த நிலங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குத்தகை காலம் முடிந்த பின்பும் அந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து அந்த இடத்தில் வணிக நிறுவனங்களை நடத்தி வந்தன. அந்த நிலங்களில் மதிப்பு பல கொடியை தாண்டும். ஒவ்வொரு அரசு நிலங்களைப் பற்றியும் சில சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல்களை வெளியிட்டு வந்தார்கள். அதே நேரம் அரசும் இந்த பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க தொடங்கியது.

Chennai metro parking train

குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பகுதியில் பல்வேறு நிலங்கள் அதிரடியாக மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த 2022ம் ஆண்டு முதலே பல்வேறு வணிக நிறுவனங்களை இடித்து, அரசு நிலத்தை மீட்டார்கள். குறிப்பாக பரங்கிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குறிப்பாக பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதிகளில், இது போன்ற நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன சுமார் 15 ஏக்கர் மதிப்பிலான அரசு நிலம் கடந்த காலங்களில் மீட்கப்பட்டன. இந்த நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அக்டோபர் 28ஆம் தேதி காலையிலேயே சென்னை ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் சுமார் 300 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சரவணபவன் ஹோட்டல் இந்த காலமாக இயங்கி வந்தது. அதனை அதிகாரிகள் மீட்டெடுத்தார்கள். சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என தீர்ப்பு வந்த காரணத்தால் மீட்கப்பட்டது.

Chennai metro parking train

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை நகர மீட்கப்பட்ட ஆலந்தூர் நிலம் சுமார் 15 ஏக்கர் ஆகும். சும்மா 40,000 சதுர அடி பரப்பளவு உள்ள அந்த நிலம் , நங்கநல்லூர் ஓடி மெட்ரோ ரயில் நிலையத்திற்காக 500 கார்கள் நிறுத்தும் பார்க்கிங் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.. தற்போது அந்த நிலத்தை வருவாய்த்துறை சென்னை மற்றும் ஒப்படைத்திருப்பதாக வெளியாகி உள்ளது. நங்கநல்லூர் ஓடி மெட்ரோ ரயில் நிலையம் என்பது சென்னை ஆலந்தூரில் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. அங்கு பார்க்கிங் வசதி என்பது இதுவரையில் இல்லை. இந்த பார்க்கிங் வசதியின் காரணமாக அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+