வகுப்பறையிலேயே தற்கொலை செய்த ஆசிரியர், சென்னை நீலாங்கரையில் மாணவர்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையிலேயே தூக்கில் தொங்கியதால், மாணவ- மாணவிகள் கதறி அழுதனர்.
சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று காலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர்.

அங்கு 8ம் வகுப்பு அறையில் ஆசிரியர் அந்தோணி ஜெனிபர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். வகுப்பறையில் ரத்தம் சிதறி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் கதறி அழுதனர். மாணவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார், தூக்கில் பிணமாக தொங்கிய அந்தோணி ஜெனிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ஆசிரியர் அந்தோணி ஜெனிபர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருமணம் ஆகாத இவர், பள்ளியிலேயே தங்கி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர், 8-ம் வகுப்பு, 9- ம் வகுப்புக்கு பாடம் நடத்தியதும், 8ம் வகுப்பு வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் வேறு பள்ளியில் இன்று தேர்வை எழுதினர். ஆசிரியர் அந்தோணி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications