சென்னை டூ நெல்லை வந்தே பாரத்தில் பிரேக் பழுது.. நடுவழியில் நின்ற ரயில்! பரிதவித்த பயணிகள்
சென்னை: சென்னையில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோயில் சென்ற வந்தே பாரத் ரயிலில் பிரேக்கில் கோளாறு ஏற்பட்டது. நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் அருகே ரயில் வந்த போது பிரேக் பிடித்துக்கொண்டு விடுபடாமல் இருந்தது. இதனால், ரயில் நிறுத்தப்பட்டு கோளாறு சீர் செய்த பிறகே புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
நாடு முழுக்க பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிவேக வசதி, சொகுசு இருக்கைகள் உள்ளிட்டவை காரணமாக வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், பல வழித்தடங்களில் தொடர்ச்சியாக வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்து வருகிறது இந்தியன் ரயில்வே.

வந்தே பாரத் ரயில்கள்
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், சென்னை - எழும்பூர், சென்னை - கோவை, சென்னை - நாகர்கோவில், சென்னை - பெங்களூர் உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களானது இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை தற்போது இருக்கை வசதிகள் கொண்ட ரயிலாக தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பயணிகளின் வசதிக்கேற்ப தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை செய்து வரும் நிலையில் சில நேரங்களில் பாதுகாப்பு குறைபாடுகளும் இருந்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயிலில் பிரேக் பழுதாகியிருந்தது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பிரேக் பழுது
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே நெல்லை வழியாக வண்டி எண் 20627/20628 எண் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது புதன்கிழமையை தவிர்த்த மற்ற நாட்களில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்றும் இந்த ரயில் சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயில் நெல்லை ஜங்சனுக்கு மதியம் 12.32 மணிக்கு வந்தடைந்தது. 12.40 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்ட நிலையில் சிறிது தூரத்தில் நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரயில் சென்றபோது திடீரென்று பிரேக்கில் பழுது உண்டானது. இதனால் ரயில் அப்படியே நிறுத்தப்பட்டது. உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
40 நிமிடங்கள் தாமதம்
அதன்பேரில் ஊழியர்கள் வந்து ரயிலில் ஆய்வு செய்தனர். அப்போது 17 - சி என்ற பெட்டியில் பிரேக் பிடித்துக் கொண்டு விடுபடாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் இந்த பழுதினை தற்காலிகமாக சரி செய்தனர். இதனா 40 நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு ரயில் கிளம்பி சென்றது. ரயில் திடீரென நடு வழியில் நின்றதால் பயணிகள் ஏன் நிற்கிறது எதற்கு என தெரியாமல் திகைத்தனர்.
பின்னர் தான் இது பற்றி தெரியவந்தது. தொடர்ந்து 40 நிமிடங்களாக ரயில் அதே இடத்தில் நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர். மீண்டும் பிரேக்கில் பழுது ஏற்படாமல் இருப்பதற்காக ரயில்வே ஊழியர்களும் ரயிலில் சென்றனர். இதனால் மீண்டும் சென்னைக்கு புறப்படும் ரயிலும் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications