கொரோனாவுடன் பிறந்த ஆண் குழந்தை.. ஸ்டீராய்டு, வென்டிலேட்டர் மூலம் போராடி உயிர் பிழைத்த நெகிழ்ச்சி
சென்னை: சென்னையில் பிறந்த இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் மூச்சுப்பிரச்சனையால் பாதித்து கொரோனா உறுதி செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை அந்த தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியது.
கொரோனா எனும் மோசமான அரக்கன் பெரியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள் என பாரபட்சம் பார்க்காமல் அஜாக்கிரதையாக இருப்பவர்களை தாக்குகிறது.
இது அறிகுறியுடன் தாக்கும் கொரோனா, அறிகுறி இல்லாமல் தாக்கும் கொரோனா என இரு வகைகளாக உள்ளன. அறிகுறி இல்லாத கொரோனா மிகவும் மோசமான உயிர் கொல்லியாகும்.

நிபுணர்கள்
கொரோனா தொற்றுக்கு மருத்துவ நிபுணர்கள் அறிவித்த ஒரு அறிகுறியும் ஏற்படாமல் சைலன்ட்டாக வந்து வைலன்ட்டாக நடந்து கொள்கிறது. பெரும்பாலானோருக்கு உயிரிழப்பு ஏற்பட காரணமாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில் வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் மேத்தா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

2 மணி நேரம்
இந்த குழந்தை பிறந்த 2 மணி நேரத்திற்கெல்லாம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா சோதனை நடத்தியதில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த குழந்தையின் தாய்க்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் நோய் தொற்று உறுதியானது.

கொரோனா தொற்று
அவருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. அவரது தொப்புள் கொடி மூலமாக வயிற்றில் உள்ள குழந்தைக்கும் கொரோனா பரவியது. அந்த குழந்தைக்கு நுரையீரலில் 80 முதல் 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.

5 நாட்கள் செயற்கை சுவாசம்
பிறந்த 2 மணி நேரத்திற்கெல்லாம் அந்த குழந்தைக்கு மூச்சு பிரச்சினையை சரி செய்ய ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டன. சுமார் 5 நாட்கள் குழந்தை வெண்டிலேட்டரில் இருந்தது. சாதாரண அறையில் குழந்தை வைக்கப்பட்டு வாய்வழியாகவே உணவுகள் கொடுக்கப்பட்டன.

ரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகள்
இதையடுத்து தொடர்ந்து ஸ்டீராய்டுகள், ரத்தம் உறையாத்தன்மை கொண்ட மருந்துகள் கொடுக்கப்பட்டதால் அந்த குழந்தைக்கு நோய் தொற்று சரியானது. பின்னர் அந்த குழந்தை 11 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இந்த குழந்தை மறுபிறவி எடுத்ததாகவே தெரிகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications