கொரோனாவுடன் பிறந்த ஆண் குழந்தை.. ஸ்டீராய்டு, வென்டிலேட்டர் மூலம் போராடி உயிர் பிழைத்த நெகிழ்ச்சி
சென்னை: சென்னையில் பிறந்த இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் மூச்சுப்பிரச்சனையால் பாதித்து கொரோனா உறுதி செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை அந்த தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியது.
கொரோனா எனும் மோசமான அரக்கன் பெரியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள் என பாரபட்சம் பார்க்காமல் அஜாக்கிரதையாக இருப்பவர்களை தாக்குகிறது.
இது அறிகுறியுடன் தாக்கும் கொரோனா, அறிகுறி இல்லாமல் தாக்கும் கொரோனா என இரு வகைகளாக உள்ளன. அறிகுறி இல்லாத கொரோனா மிகவும் மோசமான உயிர் கொல்லியாகும்.

நிபுணர்கள்
கொரோனா தொற்றுக்கு மருத்துவ நிபுணர்கள் அறிவித்த ஒரு அறிகுறியும் ஏற்படாமல் சைலன்ட்டாக வந்து வைலன்ட்டாக நடந்து கொள்கிறது. பெரும்பாலானோருக்கு உயிரிழப்பு ஏற்பட காரணமாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில் வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் மேத்தா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

2 மணி நேரம்
இந்த குழந்தை பிறந்த 2 மணி நேரத்திற்கெல்லாம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா சோதனை நடத்தியதில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த குழந்தையின் தாய்க்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் நோய் தொற்று உறுதியானது.

கொரோனா தொற்று
அவருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. அவரது தொப்புள் கொடி மூலமாக வயிற்றில் உள்ள குழந்தைக்கும் கொரோனா பரவியது. அந்த குழந்தைக்கு நுரையீரலில் 80 முதல் 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.

5 நாட்கள் செயற்கை சுவாசம்
பிறந்த 2 மணி நேரத்திற்கெல்லாம் அந்த குழந்தைக்கு மூச்சு பிரச்சினையை சரி செய்ய ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டன. சுமார் 5 நாட்கள் குழந்தை வெண்டிலேட்டரில் இருந்தது. சாதாரண அறையில் குழந்தை வைக்கப்பட்டு வாய்வழியாகவே உணவுகள் கொடுக்கப்பட்டன.

ரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகள்
இதையடுத்து தொடர்ந்து ஸ்டீராய்டுகள், ரத்தம் உறையாத்தன்மை கொண்ட மருந்துகள் கொடுக்கப்பட்டதால் அந்த குழந்தைக்கு நோய் தொற்று சரியானது. பின்னர் அந்த குழந்தை 11 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இந்த குழந்தை மறுபிறவி எடுத்ததாகவே தெரிகிறது.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications