Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலையே சுத்துதே.. "தலைமைக்கழகம்" திடீர் அழைப்பு.. திகைக்கும் எடப்பாடி பழனிசாமி.. குலுங்கபோகுது சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்து என்ன செய்வது? என்ற குழப்பத்திற்கும், கலக்கத்திற்கும் ஆளாகி உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், புது அதிரடியை கையில் எடுத்துள்ளார்.

அதிமுகவின் கொடி, சின்னம் போன்றவற்றை, ஓபிஎஸ் பயன்படுத்த பயன்படுத்த ஹைகோர்ட்டு தடை விதித்துள்ளது... எனவே, இவைகளை ஓபிஎஸ் பயன்படுத்துவதில்லை..

Chennai OPS Meeting and Are these the Important decisions O Panneerselvam is going to take

வெளிநாடு: சமீபத்தில், வெளிநாட்டில் சிகிச்சை முடிந்து, சென்னை ஏர்போர்ட்டில் வந்திறங்கிய ஓபிஎஸ், அதிமுக கொடி இல்லாத காரில்தான் பயணம் செய்தார்... அதன் பிறகு நடந்த சட்டமன்ற கூட்டத்துக்குவந்தபோதும், கரை வேட்டி அணியவில்லை.

ஒருபக்கம் சட்டரீதியாகவும், மற்றொருபக்கம் கட்சி ரீதியாகவும் விவகாரங்களை எதிர்கொண்டு வருகிறார். இதற்கு நடுவில், தன் பக்கமுள்ள நிர்வாகிகளையும் தக்க வைக்க வேண்டிய நெருக்கடி, இன்று ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளால், அடுத்தடுத்து கிடைத்துவரும் பின்னடைவுகள் காரணமாக, ஓபிஎஸ் நிர்வாகிகள் பலர் நொந்து போய் உள்ளார்களாம்.. இப்படி அதிருப்தியில் இருப்பவர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து வலை விரிக்கப்பட்டுவருவதாகவும் தெரிகிறது. எனவே, தன்னிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவாளர்களையும், இறுக்கமாக கையில் வைத்திருகக் வேண்டிய அவசியம் ஓபிஎஸ்ஸுக்கு வந்திருக்கிறது.

அரசியல் நிலைப்பாடு: போதாக்குறைக்கு எம்பி தேர்தலும் நெருங்கிவிட்டதால், அவரது அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.. எனவே, இவைகள் அனைத்துக்குமே தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.. பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான, மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் வருகிறது.. இதில், என்ன முடிவு வரப்போகிறதோ தெரியவில்லை.

இப்படி நாலாபக்கமும் சிக்கல்கள் உள்ள நிலையில், நாளை மறுநாள் திங்கட்கிழமை, சென்னையில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் ஓபிஎஸ்.. எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று காலை 10 மணிக்கு, அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இலை, சின்னம்: இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அழைப்பு கடிதமும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், "அதிமுக" என்ற பெயரை பயன்படுத்தாமல், "தலைமைக்கழகம்" என்றே அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். அதேபோல, இரட்டை இலை சின்னமோ, அதிமுக நிறமோ இல்லாமல் வெறும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது.

எனினும், எதற்காக இந்த ஆலோசனை கூட்டம் என்று தெரியவில்லை.. கோவையில் ஜனவரி 6-ல் மண்டல மாநாடு நடப்பதாக கூறியிருப்பதால், அதுகுறித்து ஆலோசனை நடக்கலாம் என்கிறார்கள்.. குறிப்பாக, ஜனவரி 11-ந்தேதி வெளியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு மாநாடு நடத்தலாமா? என்று முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சுற்றுப்பயணம்: வரும் 20-ந்தேதி கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் கலந்து கொள்வதுடன், அதற்கு பிறகு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, அதுகுறித்தும் ஆலோசிக்கலாம்.

அதைவிட முக்கியமாக, வரப்போகும் நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் பின்னடைவாக அமைந்துவிட்டால், புது கட்சி துவங்கலாமா? என்ற யோசனையும் ஓபிஎஸ்ஸூக்கு உள்ளதாக சொல்கிறார்கள்.. இதை பற்றியும் ஆதரவாளர்களிடம் கருத்து கேட்கப்படலாம் என தெரிகிறது.

ஆக, எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ் நாளை மறுநாள் கூட்டியிருக்கும் இந்த கூட்டம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிது. இதை எடப்பாடி பழனிசாமி தரப்பும் அமைதியாக கவனித்து வருகிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+