திடீரென பிங் நிறத்தில் மாறிய பள்ளிக்கரணை ஏரி! ஓரே ஆண்டில் 2ஆவது முறை- மிரண்ட பொதுமக்கள்! என்ன காரணம்
சென்னை: தலைநகர் சென்னையில் சுற்றுச்சூழல் சீர்கேடு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், பள்ளிக்கரணை ஏரி நிறம் மாறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளது. இதனால் கடும் வெயில், பருவம் தவறிப் பெய்யும் மழை என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
சுற்றுச்சூழலை மேம்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பெரியளவில் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்கதையாகவே உள்ளது.

நிறம் மாறிய ஏரி
தலைநகர் சென்னை சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் சதுப்புநிலமாக இருந்து பள்ளிக்கரணை மாசுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்புநிலம் அருகே இருந்த ஏரி இப்போது திடீரென பிங் நிறத்தில் மாறியுள்ளது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை கிடங்கு
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒரு பகுதி ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டது. அங்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பயோ கழிவுகள், மருத்துவ கழிவுகள், ரசாயன கழிவுகள் என அனைத்துக் கழிவுகளும் அங்குக் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு மீத்தேன் உற்பத்தியாகி, அவ்வப்போது குப்பைக் கிடங்கில் தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

என்ன காரணம்
பள்ளிக்கரணை அருகே உள்ள இந்த ஏரியில் பாசிகள் அதிகமானதே இதற்குக் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏரியில் சயனோபாக்டீரியாவின் வளர்ச்சியால், நீர் பிங்க் நிறத்தில் மாறி உள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோக்களில் ஏரி எந்தளவு பிரகாசமான பிங்க நிறத்தில் மாறியுள்ளது என்பதை ஒருவர் பார்க்கலாம்.

டெஸ்ட்
இதையடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் ஏரியில் இருந்து மாதிரிகளைச் சேகரித்துச் சென்றனர். ஆக்ஸிஜன் குறைந்தது, மீத்தேன் கசிவு உள்ளிட்ட காரணங்களால் சயனோபாக்டீரியா உருவானதே இதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேநேரம் இந்த பிங் நிறுவனம் சிவப்பு பைகோரித்ரின் காரணமாகக் கூட ஏற்பட்டு இருக்கலாம் என்றும் எதையும் சோதனை முடிவுகள் வந்த பிறகே உறுதியாகக் கூற முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாசிகள்
பைகோரித்ரின் என்பது சிவப்பு பாசிகள் அந்த நிறத்தில் இருக்க காரணமாக இருப்பதாகும். இது நீல ஒளியில் இருந்து ஆற்றலை உறிஞ்சி சிவப்பு நிறத்தை வெளியே உமிழ்கிறது. பொதுவாக இவை ஆழமான நீரில் தான் இருக்கும். ஒரே ஆண்டில் பள்ளிக்கரணை ஏறி இதுபோல பிங் நிறத்தில் மாறுவது இது இரண்டாவது முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அச்சம்
இது அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சயனோ பாக்டீரியாக்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியிடும். எனவே, நிறம் மாற சயனோ பாக்டீரியாக்கள் காரணம் என்றால் அது தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்களும் மூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications