சென்னை மெட்ரோ வாட்டருக்காக ஆன்லைனில் புக் செய்துவிட்டு தவம் கிடக்கும் குடியிருப்புவாசிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை குடிநீர் வாரிய லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால், குடியிருப்புவாசிகள் தண்ணீர் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.

சென்னையில் வேளச்சேரி பெருங்குடி மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது சென்னை குடிநீர் வாரிய லாரிகளை மட்டுமே நம்பியுள்ள இவர்கள் தண்ணீர் கேட்டு ஆன்லைனில் பதிவு செய்து பல நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்

Chennai people who have booked online and have a long waiting for metro watter

இது பற்றி பேசிய குடியிருப்புவாசிகள் ஏப்ரல், மே, ஜூன் இந்த மாதங்களில் தண்ணீர் அவ்வளவு எளிதாக கிடைக்காது. ஆன்லைனில் மெட்ரோ வாட்டர் புக் செய்வதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் மாலை 5 மணிக்கு சில நேரங்களில் தண்ணீர் புக் செய்ய முயற்சித்தால், அதற்குள்ளாகவே புக்கிங் முடிந்துவிடுகிறது என கூறினர். மேலும் தண்ணீருக்காக பதிவு செய்து 10 நாட்களாகியும் கிடைப்பதில்லை. தினமும் தண்ணீருக்காக மிகவும் கஷ்டப்படுவதாக பொதுமக்கள் குமுறுகின்றனர்.

Chennai people who have booked online and have a long waiting for metro watter

மெட்ரோ தண்ணீர் சப்ளை செய்ய கூடிய இடங்களிலேயே தண்ணீர் இல்லாததால் தான் காலதாமதம் ஆவதாக அதிகாரிகள் கூறுவதாக மக்கள் குறிப்பிட்டனர். இதனிடையே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் தண்ணீர் லாரிகள் 24 மணிநேரமும் ஓட்டுவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது

இதனால் விபத்து ஏற்படுவதாக வந்த புகாரையடுத்து தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் சென்னை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர் லாரி டிரைவர்கள் குறைந்த வேகத்தில் நிதானமாக ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+