சிஏஏ போராட்டம், தடியடி.. முதல்வரை சந்தித்து சென்னை காவல் துறை ஆணையர் விளக்கம்
Recommended Video
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் மற்றும் போலீஸ் தடியடி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்னை காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் அளித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர்.
அப்போது ஏராளமானோர் மீது காயம் ஏற்பட்டது. 2000-க்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த தடியடியை கண்டித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் போராட்டம் குறித்தும் தடியடி குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் அளித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையி












Click it and Unblock the Notifications