Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மாநகராட்சியுடன் கைகோர்த்த காவல்துறை.. பிடிப்பட்டால் உடனே வழக்கு.. அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித் திரியும் நிலையில், அவற்றை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் சென்னை காவல்துறையினரும் இணைந்துள்ளனர். பிடிக்கப்படும் மாட்டின் உரிமையாளர் மீது போலீஸாரே நேரடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் அதிகம்.. இந்த சூழலில் மாடுகள் சாலைகளில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிகின்றன. அப்படி சுற்றித் திரியும் மாடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது ஒருபுறம் எனில், மாடுகள் அவ்வப்போது மனிதர்களை பயங்கரமாக தாக்கி விடுகின்றன. மாடுகள் அடிக்கடி முட்டி தூக்கி உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதேபோல் திடீரென குறுக்கே வரும் மாடுகளால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைவதும் நடக்கிறது.

Chennai Police Department in collaboration with Chennai Corporation to catch cows

சென்னையில் சாலைகளில் மாடுகளை சுற்ற விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம் விதிக்கப்படும். இல்லாவிட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்படும். இதுதான் எதார்த்தம்.

கடந்த இரண்டு மாதம் முன்பு சென்னை அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து வீட்டிற்கு அம்மா உடன் சென்று கொண்டிருந்த ஆயிஷா என்ற சிறுமியை தெருவில் சுற்றிய மாடு கொடூரமாக முட்டி தள்ளியது. இதில் அந்த சிறுமி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தெருவில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரமாக இறங்கியது. ஆனால் அதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் மாநகராட்சி அப்போது கடும் நடவடிக்கை எடுத்ததுடன், மாட்டின் உரிமையாளர்களை எச்சரித்தது.

ஆனாலும் தெருக்களில் மாடுகளின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாத நிலை சென்னை முழுக்க உள்ளது . இந்த சூழலில் கடந்த அக்டோபர் 18-ந்தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெருவில் நடந்து சென்ற சுந்தரம் என்ற 80 வயது முதியவரை மாடு முட்டியது. இதில் சுந்தரம் படுகாயமடைந்தார். இதையடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கண்டிப்பாக பிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதன்படி மாநகராட்சி ஊழியர்கள் திருவல்லிக்கேணி தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்தனர். இதேபோல் சென்னை முழுக்க மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

இதனிடையே பிடிக்கப்படும் மாடுகள் மாநகராட்சி கால்நடை காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், மாட்டின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டாவிட்டால் மாடுகள் ஏலம் விடப்படும். அல்லது கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல் மாட்டின் உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக மாநகராட்சி சார்பில் காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதுதான் இப்போது உள்ள நடைமுறை.

இந்நிலையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் சாலை, தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் ஏற்படுவதால், மாநகராட்சியுடன் சென்னை காவல்துறையும் இணைந்து மாடுகளை பிடிக்க உள்ளது. காவல்துறையால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர் மீது போலீஸாரே நேரடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். போலீசார் இந்த விஷயத்தில் தீவிரமான நடவடிக்கை எடுத்தால் தான் சென்னை மாடுகள் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+