பட்டியலின மக்கள் மீது அவதூறு- மீரா மிதுன் ஆஜராக போலீஸ் சம்மன்- வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது?
சென்னை: பட்டியலின சமூகத்தினர் ஏமாற்று பேர்வழிகள்; அந்த சமூகத்தை சேர்ந்த அனைவரையும் சினிமாவை விட்டே துரத்த வேண்டும் என்று இழிவாக பேட்டி கொடுத்த நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மீரா மிதுன் பேசிய இழிவான பேச்சுகளுக்காக அவர் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மாடலிங் துறையில் இருந்த மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி என சில படங்களில் நடித்தார். பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் பாராட்டும் இயக்குநர் சேரன் மீது கேவலமான அவதூறுகளை சொல்லி கடும் விமர்சனத்துக்குள்ளானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளைத் தவிர வேறு எதனையும் போடக் கூடாது என்பதாகவே செயல்பட்டு வருகிறார்.

அத்தனை பேருடனும் வம்பு
நடிகர்கள் அஜித், சூர்யா, விஜய் என அனைத்து தரப்பு ரசிகர்களுடன் மோதி வாங்கிக் கட்டிக் கொண்டார் மீரா மிதுன். இந்த நிலையில்தான் அண்மையில் பேட்டி ஒன்று அளித்த மீரா மிதுன் பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்கிற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் கொட்டி தீர்த்தார். பட்டியலின மக்களை குறிப்பிட்டே மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்தார் மீரா மிதுன்.

தலித்துகளுக்கு எதிராக பேச்சு
பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்; அப்படி இருப்பதால்தான் அவர்களை அனைவரும் விமர்சிக்கிறார். இத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒட்டுமொத்தமாக சினிமா துறையில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என ஏகத்துக்கும் இழிவுபடுத்தி பேசி இருந்தார் மீரா மிதுன். அவரது இந்த பேச்சு திரைத்துறையில் மட்டுமல்ல பொதுவாக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

மீரா மிதுன் மீது புகார்
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலரும் பல்வேறு காவல்நிலையங்களில் மீரா மிதுன் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசில் புகார் கொடுத்தனர். சென்னையில் வன்னி அரசு கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு- சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

மீரா மிதுனுக்கு சம்மன்
வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்ய தூண்டுதல், ஜாதி மதம் குறித்து பேசி கலகத்தை உருவாக்குதல் என ஜாமீனில் வெளிவர முடியாத 7 பிரிவுகளில் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மீரா மிதுன் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு -சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த விசாரணைக்குப் பின்னர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மீரா மிதுன் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications