சென்னையில் இரவு ரோந்து பணியில் பெண் போலீசாருக்கு விலக்கு - பறந்தது உத்தரவு!
சென்னை: சென்னையில் இரவு ரோந்து பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் இரவு ரோந்து பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவல் ஆய்வாளர், பெண் காவல் உதவி ஆய்வாளர், பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு இரவு ரோந்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் காவல்துறையினர் விலக்கு கேட்டால் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் அனுமதி அளிக்கும்படி சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதற்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications