தண்ணீரோ தரையோ! அண்ணாமலை யாத்திரைக்கு சென்னையில் அனுமதி இல்லை! போலீஸ் கேள்வியால் பாஜக திணறல்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வரும் என் மண் என் மக்கள் யாத்திரை சென்னையில் நடத்த போலீஸார் அனுமதி மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு விளக்கவும் தமிழக அரசின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைக்கவும் என் மண் என் மக்கள் எனும் யாத்திரையை தொடங்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். அங்கிருந்து தினம் ஒரு தொகுதிகளில் பொதுக் கூட்டத்தை நடத்தினார். பிப்ரவரி 10 ஆம் தேதி உத்தரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் கூட்டத்தை நடத்தினார்.
இந்த நிலையில் 200ஆவது தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதியில் கடந்த 11 ஆம் தேதி அண்ணாமலை நடைப்பயணம் செய்வதாக இருந்தது. அதைத் தொடர்ந்து மற்ற தொகுதிகளிலும் நடைபயணம் செல்ல அண்ணாமலை திட்டமிட்டிருந்தார். ஆனால் சென்னையில் எந்த பகுதியிலும் நடைப்பயணம் செல்வதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
இதனால் அரங்க கூட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. தரை பகுதியில் சென்றால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போலீஸார் மறுக்கிறார்கள். சரி தண்ணீரில் சென்றால் யாருக்கும் எந்த இடையூறும் இருக்காதே என நினைத்து பாஜக மீனவர் அணி சார்பில் இன்றைய தினம் நீலாங்கரையில் இருந்து பாலவாக்கம் வரை கடலில் படகுகளில் கடல் தாமரை யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு எப்படி அனுமதி மறுக்க முடியும் என்ற எண்ணத்தோடு போலீஸார் அனுமதிக்காக கேட்டுள்ளனர். உடனே போலீஸ் தரப்பில் இருந்து எத்தனை படகுகள் கலந்து கொள்கின்றன என கேட்டுள்ளனர். அதற்கு பாஜக மீனவர் அணியினர் 300 என்றதும் அதை 100ஆக குறைத்து கொள்ளுங்கள் என போலீஸ் தரப்பில் கூறியிருக்கிறார்கள்.
அதனால் பரவாயில்லை என்ற முடிவுக்கு மீனவர் அணி வந்து 100 படகுகளுடன் கடல் தாமரை யாத்திரையை நடத்த முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில்தான் போலீஸார் தரப்பில் இருந்து 8 கேள்விகளை கேட்டு பாஜகவினரை திணற வைத்தனராம்.
எத்தனை படகுகள் யாத்திரையில் கலந்து கொள்கின்றன?
யாத்திரையில் பங்கெடுக்கும் படகுகள் அனைத்தும் மீன்வளத் துறையில் பதிவு செய்யப்பட்டதா, அப்படியென்றால் பதிவு எண் என்ன?
- யாத்திரையில் கலந்து கொள்வதற்கு மீன்வளத் துறை அனுமதி அளித்துள்ளதா
- கடற்கரையில் கூடுவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி பெறப்பட்டு உள்ளதா?
- கடலில் செல்வதால் கடற்படை, கடலோர காவல் படையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
- யாத்திரையில் கலந்து கொள்ளும் மீனவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு நீச்சல் தெரியுமா?
- பொதுமக்கள் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்?
- விபத்தை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன
மீனவர்களிடம் நீந்த தெரியுமா என கேட்டது அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்று நடைபெறவிருந்த கடல் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.
-
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
மதுரை மெட்ரோ ரயிலுக்கு மறுப்பு ஏன்? திருப்பரங்குன்றம் முருகன் முன்.. ஆதாரத்துடன் அண்ணாமலை ஓபன் டாக் -
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம்












Click it and Unblock the Notifications