சென்னையில் மனுதர்ம நூலை எரித்த திருமாவளவன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்கு
சென்னை: பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை சென்னையில் எரித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அனைத்து பெண்களையும் திருமாவளவன் விபசாரிகள் என பேசிவிட்டதாக ஒரு புகார் எழுந்தது. ஆனால் திருமாவளவனோ, மனுதர்மம்தான் அப்படித்தான் சொல்கிறது; அதையே மேற்கோள்காட்டி பேசினேன் என விளக்கம் தந்தார்.

மனுதர்ம நூல் தடை கோரிக்கை
ஆனாலும் பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக நடிகை குஷ்பு உள்ளிட்டோர் ஆவேசப்பட்டனர். இதற்காக திருமாவளவன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மனுதர்ம நூலை தடை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்தது.

மனுதர்ம நூல் எரிப்பு
தமிழகத்தின் பல பகுதிகளில் சனிக்கிழமையன்று மனுதர்ம நூலை தடை செய்யக் கோரி போராட்டம் நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மனுதர்ம நூல் தீயிட்டு எரிக்கவும் செய்யப்பட்டது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசியல் காரணம்
சென்னை போராட்டத்தில் பேசிய திருமாவளவன், மனுதர்ம நூலின் பகுதிகளை வாசித்து காட்டினார். பெண்களை மனுதர்மம் எப்படி எல்லாம் இழிவுபடுத்துகிறது என்பதையும் சுட்டிக்காட்டிப் பேசினார். அத்துடன் 1 மாதத்துக்கு முன்னர் பேசிய பேச்சை வைத்து இப்போது திமுக கூட்டணியில் சலசலப்பை உருவாக்கவே திரித்து பொய்யை பரப்புகின்றனர் என்றார் திருமாவளவன்.

250 பேர் மீது வழக்கு
மேலும் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாட்டையடியாக இல்லாமல் செருப்படியாக கொடுத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் யாரை கண்டிக்க வேண்டுமோ அவர்களை கண்டித்திருக்கிறார் எனவும் திருமாவளவன் பேசினார். இதனிடையே தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் திருமாவளவன் உள்ளிட்ட 250 பேர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications