விநாயகர் சிலை ஊர்வலம்.. திருவல்லிக்கேணியில் முள்வேலி! பட்டாபிரத்தில் திரை கட்டி மசூதி மறைப்பு!
சென்னை: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சென்னையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பாதுகாப்புக்காக முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பட்டாபிரத்தில் திரைக்கட்டி மசூதி மறைக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் கடந்த 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் சுமார் 1,500 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்து முன்னணி உள்ளிட்ட பல அமைப்புகள் சார்பாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட நிலையில், சென்னை முழுவதும் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
சென்னை மாநகர காவல் ஆணையத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 1,519 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இதற்காக சென்னை முழுவதும் சுமார் 5,000 மேற்பட்ட போலீசாரும், 2,000க்கும் அதிகமான ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக அதிக அளவில் கொண்டுவரப்பட்டது. எனவே இப்பகுதியில் பாதுகாப்புக்காக மின்விளக்கு கம்பங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பட்டினம்பாக்கம் செல்லும் விநாயகர் சிலைகள், பாதைகளை மாற்றக்கூடாது என திருவல்லிக்கேணியில் போலீசார் முள்வேலிகள் மற்றும் தடுப்பு கம்பிகளை அமைத்திருந்தனர். பட்டினம்பாக்கம் செல்லும் விநாயகர் சிலைகள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் வந்து, பாரதி சாலை வழியாக இடதுபுறம் திரும்பி பட்டினம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும். இதுதான் அனுமதிக்கப்பட்ட பாதை. ஆனால் சில இந்துத்துவா அமைப்புகள் இந்த பாதையை மீறி ஐஸ்ஹவுஸ் வழியாக செல்ல முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதனை தடுக்கவே, வருடா வருடம் இந்த வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதேபோல பட்டாபிராம் மேம்பாலத்தின் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இதற்காக மேம்பாலத்தை ஒட்டி இருக்கும் மசூதியை போலீசார் திரைச்சீலை அமைத்து மறைத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த வழியாக ஊர்வலம் செல்வது வழக்கமாக ஒன்றாக இருப்பினும் இந்த ஆண்டு மட்டும் போலீசார் திரைச்சீலை அமைத்து மசூதியை மறைத்திருக்கின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications