சென்னையில் நாளை மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு.. உங்கள் ஏரியா இருக்கா? இந்த லிஸ்ட்டை பாருங்க
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக நாளை (செவ்வாய்கிழமை) சில இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. அதன்படி நாளை காலை 9 மணிக்கு நிறுத்தப்படும் மின்சாரம் மதியம் 2 மணி வரை வராது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கும் வகையில் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பராமரிப்பு பணி நடைபெறும் இடங்களில் மின்வாரியம் சார்பில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

அந்த வகையில் ஆகஸ்ட் 27 ம் தேதியான நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னையில் சில இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 27.08.2024ல் அம்பத்தூர், செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏரியாவின் சில இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிந்த பிறகு மதியம் 2 மணிக்குள் மின்சாரம் மீண்டும் விநியோகம் செய்யப்படும்.
அம்பத்தூர்: எஸ் & பி லிவிங் ஸ்பேஸ் மற்றும் எசென்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி ரோடு, பொன்னியம்மன் நகர், வானகரம் ரோடு, ராஜன் குப்பம், விஜிஎன் மகாலட்சுமி நகர், எஸ் அண்ட் பி ரெசிடென்ஸி, மெட்ரோ சிட்டி பேஸ் I மற்றும் II, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பிகேஎம் தெரு, இருளர் காலனி, எட்டீஸ்வரன் கோவில் தெரு, செட்டி மெயின் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
செம்பரம்பாக்கம்: நசரத் பேட்டையின் அனைத்து இடங்கள், மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூர் டிரங்க் ரோடு, செம்பரம்பாக்கத்தின் ஒரு பகுதி, திருமழிசையின் ஒரு பகுதி, மலயாயம்பாக்கம், அகரம்மேல் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
ரெட்ஹில்ஸ்: பாடியநல்லூர்,ஜோதி நகர், கல்பகா நகர் மருதுபாண்டி நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications