ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள்.. மாநில கல்லூரி மாணவர்கள், சென்னையில் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, அந்த ஆலை மூடப்பட்டது. அதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் முறையிட்டது.

Chennai presidency college students protest against Sterlite

இந்த விவகாரத்தில் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மாணவர்கள் தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கக்கோரியும் அவர்கள் போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.

போராட்டத்தின் போது, மாணவர்களை காவல்துறை துணை கொண்டு கல்லூரி முதல்வர் அச்சுறுத்தியதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். போராட்டத்தை தலைமை தாங்கிய மாணவர் மாரி என்பவரை காவல்துறை துணை கொண்டு கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் தனியாக அழைத்து சென்றதால், மாணவர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+