சென்னையை மிரட்டிய சைக்கோ கொலையாளி.. பொறி வைத்து பிடித்த போலீஸ்!
சென்னை: சென்னை மக்களையும் மது பிரியர்களையும் மிரட்டி வந்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். மானாமதுரை ரயில் நிலையம் அருகே போலீசார் சைக்கோ கொலையாளியை மடக்கிப்பிடித்துள்ளனர்.
ஆண்டுதோறும் சைக்கோ கொலையாளி ஒருவர் சென்னையை மிரட்டுவதும் மக்கள் தூக்கத்தை தொலைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டும் சைக்கோ கொலையாளி ஒருவர் சென்னை மக்களை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அச்சுறுத்தி வந்தார்.
ஆனால் இந்தமுறை சைக்கோ கொலையாளியின் குறி மது பிரியர்கள் மீது. சாலையோராம் இரவில் மதுபோதையில் மயங்கி கிடந்தவர்களை குறி வைத்தே வேட்டையை தொடங்கினான் சைக்கோ கொலையாளி.

ஆணுறுப்பு துண்டிப்பு
ரெட்டேரியில் பாலத்தின் கீழ் கடந்த மாதம் 26ஆம் தேதி மதுபோதையில் மயங்கி கிடந்தார் அஸ்லம் பாஷா. இதனைக் கண்ட சைக்கோ கொலையாளி அவரது ஆணுறுப்பை துண்டித்தான்.

மற்றொருவர் மீது தாக்குதல்
இதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்லம் பாஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்த இரண்டு நாட்களில் அதே பகுதியில் மதுபோதையில் படுத்திருந்த நாராயணன் என்பவரின் ஆணுறுப்பும் துண்டிக்கப்பட்டது.

தீவிரமாக இறங்கிய போலீஸ்
இதனால் பீதியடைந்தனர் அப்பகுதி மக்கள். நிச்சயம் இது சைக்கோ கொலையாளியின் வேலைதான் என்பதை யூகித்த போலீஸ் சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.

வீடியோ வெளியிட்ட போலீஸ்
சைக்கோ கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சைக்கோ கொலையாளியின் வீடியோவை வெளியிட்டனர் போலீஸ்.

மானாமதுரையில் கைது
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த நிலையில் சைக்கோ கொலையாளி முனியசாமி இன்று கைது செய்யப்பட்டார். மானாமதுரை ரயில் நிலையம் அருகே சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் தீவிரம்
இதைத்தொடர்ந்து சைக்கோ கொலையாளியை சென்னை கொண்டுவந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னை மக்கள் நிம்மதி
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை மக்களின் தூக்கத்தை கெடுத்து பீதியை ஏற்படுத்திவந்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
-
மண்டைக்கேறிய போதை.. ரம்யாவின் படுக்கையறையில் புகுந்த சென்னை போலீஸ்காரர்.. மறு நொடியே பிக் ட்விஸ்ட் -
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு நிபந்தனைகள் தளர்வு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
சென்னை மக்களே 'கரண்ட் பில்' இன்னும் கட்டவில்லையா.. மின்சார வாரியம் மிக முக்கிய அறிவிப்பு -
காது மடல் ஓட்டைகளுக்கு ஆபரேஷன்! சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மும்பை இன்ஸ்டா பிரபலம் கைது! -
மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ? -
சென்னை ரிசார்ட்டில் பல் மருத்துவர் செய்த காரியம்.. ₹11 லட்சத்துக்காக பவர் பத்திரத்தில் ஆடிய ஆட்டம்! -
“அரசு எங்களை ஏமாத்திருச்சு..” தேர்தல் நேரத்தில் போராட்டத்தை கையில் எடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு












Click it and Unblock the Notifications