இப்படியுமா நடக்கணும்.. சென்னையில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்சார கேபிள்.. தூய்மைப் பணியாளர் பலி
சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கண்ணகி நகர் பகுதியில் மழைநீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக ஏராளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது

ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பாரிஸ், அடையாறு, ஈஞ்சம்பாக்கம், கண்ணகி நகர், ராஜா அண்ணாமலை புரம், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மழைநீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்த மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியாளர் வரலட்சுமி என்பவர் இன்று காலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு சாலையில் மழைநீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் வரலட்சுமி தூய்மைப் பணியில் ஈடுபட்ட நிலையில், மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications