சென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்தது போல நகரின் பல பகுதிகளில் தூறிய மழையால் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.
சென்னை: ஓஹோ மேகம் வந்ததே என்று ஜாலியாக பாடத் தொடங்கிவிட்டனர் சென்னைவாசிகள். திடீரென பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது அவ்வப்போது வெயிலும் சுட்டெரித்து வருகிறது.
சென்னையில் வெப்பசலனம் காரணமாக, எழும்பூர், அண்ணா சாலை, புதுப்பேட்டை, பெரம்பூர், கொளத்தூர், திநகர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, திருவள்ளூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கணித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 16ஆம் தேதிவரை பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் கணித்திருந்தது.
அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது போல இன்று திடீரென சாரல் மழை பெய்தது.
சென்னையில் வெப்பசலனம் காரணமாக, எழும்பூர், அண்ணா சாலை, புதுப்பேட்டை, பெரம்பூர், கொளத்தூர், திநகர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, திருவள்ளூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.