சென்னையில் தொடர்ந்து குறையும் பாதிப்பு- இன்று 1,140 பேருக்கு கொரோனா; 24 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா உக்கிரமான பாதிப்பை ஏற்படுத்திய சென்னையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. சென்னையில் இன்று 1,140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்திய அளவில் தமிழகம்தான் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சென்னைதான் மிக மோசமான பாதிப்பையும் மரணங்களையும் எதிர்கொண்டிருக்கிறது.

Chennai records 1,140 fresh Positives for Coronavirus

ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனாவின் பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மிகவும் ஆறுதலான ஒன்றாக இருக்கிறது. அதேபோல் சென்னையில் கொரோனா மரணங்களும் குறைந்து வருகின்றன.

சென்னையில் இன்று 1,140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 78,573 ஆக உயர்ந்தது. சென்னையில் இன்று 24 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 1,277 ஆகவும் அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 337 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 219 பேருக்கும் கொரோனா உறுதியானது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 352 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டில் 7 பேரும் திருவள்ளூரில் 2 பேரும் காஞ்சிபுரத்தில் 3 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8283. காஞ்சிபுரத்தில் 3979; திருவள்ளூரில் 6930 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+