Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.5 கோடி கஞ்சா பொருள்.. வைத்து சென்றது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கஞ்சா பொருட்கள் அடங்கிய பையை எடுத்து வந்தது யார்? ரயில் நிலையத்தில் விட்டு சென்றது ஏன்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பல்வேறு இடங்களிள் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க.. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

Chennai Rs 5 Crore Worth High-Grade Ganja Seized at Perambur Railway Station

அதே நேரத்தில் சட்ட விரோதமாக பணம் பெரிய அளவில் கொண்டு செல்லப்படுகிறதா? வாக்காளர்களுக்கு கொடுக்க பரிசு பொருட்கள் எதுவும் எடுத்து செல்லப்படுகிறதா? என முக்கியமான இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில்தான், சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா சிக்கியுள்ளது. ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றை போலீசார் திறந்து பார்த்தனர். இதில் ஹைட்ரோபோனிக் என்ற உயர்ரக கஞ்ச இருந்தது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த கஞ்சா பொருட்கள் அடங்கிய பையை எடுத்து வந்தது யார்? ரயில் நிலையத்தில் விட்டு சென்றது ஏன்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ரயில் வழியாக இந்த கஞ்சா கொண்டு வரப்பட்டு இருக்கலம் எனவும், போலீசாரின் சோதனைக்கு அஞ்சி ரயில் நிலையத்திலேயே கடத்தல்காரரக்ள் விட்டு சென்று இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தலைநகர் சென்னையில் 5 கோடி மதிப்புள்ள கஞ்சா பொருள் சிக்கியது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சமீப காலமாக போதை பொருட்கள் அடிக்கடி கைப்பற்றப்படுகின்றன. இந்த சூழலில்தன் பெரிய தொகை மதிப்பிலான கஞ்சா சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+