உச்சக்கட்ட அதிருப்தி.. கூவம் ஆற்றில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்! தமிழக அரசுக்கு எதிராக முழக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாநகராட்சி வசம் இருக்கும் தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது, பணி நிரந்தரம், ஊதிய பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் கூவம் ஆற்றில் இறங்கி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
சென்னை எழும்பூர் அருகே சுமார் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கூவம் ஆற்றில் இறங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.













Click it and Unblock the Notifications