தண்டையார்பேட்டை "பாலத்துக்கு" கீழே யாருங்க அது? நள்ளிரவில் எட்டிப்பார்த்த போலீஸ்.. ஐயோ, "அந்த" காட்சி
சென்னை: சென்னையே அதிர்ந்து போய் கிடக்கிறது.. நள்ளிரவில் கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள்.. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பள்ளி சிறுவர்கள்.. தாக்குதலுக்கு ஆளானவர் ஒரு போலீஸ் அதிகாரி.
சென்னை மூலக்கடை, அண்ணா நகரை சேர்ந்தவர் பாலமுருகன்.. 56 வயதாகிறது.. இவர் ஆர்.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

ரோந்து பணிகள்: நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் ரோந்து பணிக்கு கிளம்பினார் எஸ்.ஐ. பாலமுருகன்.. ரோந்து பணி என்பதால், யூனிபார்மில் இல்லாமல், சாதாரண மப்டி உடையில் இருந்திருக்கிறார்.. தன்னுடைய டூவீலரில், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது நள்ளிரவு நேரம்.. பாலத்துக்கு கீழே 4 சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தனர்... இந்த நேரத்தில் சின்ன பிள்ளைகள் இங்கே ஏன் நிற்க வேண்டும்? என்று சந்தேகப்பட்டு, அவர்களிடம் சென்று பாலமுருகன் விசாரித்தார்..
அப்போது 4 பிள்ளைகளுமே உளற ஆரம்பித்துள்ளனர்.. எந்த கேள்வி கேட்டாலும், முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லி உள்ளனர்.. அப்போதுதான், அந்த சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததை பாலமுருகன் கண்டுபிடித்தார்.
ஆத்திரம்: இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள், திடீரென பாலமுருகனை தங்கள் கைகளாலேயே தாக்கி உள்ளனர்.. பிறகு, கீழே கிடந்த கற்களை எடுத்து, அவர் மீது வீசி தாக்கி உள்ளனர்.. இதில், ஒரு பெரிய கல், பாலமுருகன் கன்னத்திலேயே பட்டுவிட்டது.. இதில் படுகாயமடைந்த பாலமுருகன் வலியால் அலறி கத்தினார். அந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சுருண்டு விழுந்து கிடந்த அவரை மீட்டு, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், பொதுமக்களை பார்த்ததுமே, கஞ்சா போதை சிறுவர்கள் எகிறி தப்பி ஓடிவிட்டார்கள்.. பாலமுருகனுக்கு முகத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்ட நிலையில், தற்போது மூக்கு தண்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதாம்.. தீவிரமான சிகிச்சை அவருக்கு நடந்து வருகிறது.. வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், நேரடியாகவே மருத்துவமனைக்கு சென்று பாலமுருகனுக்கு ஆறுதல் சொன்னார்.

சிசிடிவி ஆய்வு: இதனிடையே, ஆர்கே நகர் போலீஸார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.. அதில் தாக்குதலில் ஈடுபட்ட 4 சிறுவர்களும் அடையாளம் தெரிந்தது.. இவர்கள் 4 பேருமே அதே பகுதியை சேர்ந்தவர்களாம்.. 4 பேருமே, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களை போலீஸார் கைது செய்து, இப்போது விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில், அந்த சிறுவர்களிடம் பாலமுருகன் விசாரிக்க துவங்கும்போதே, ஒருமையில்தான் பாலமுருகனை பேசியிருக்கிறார்கள்.. அப்போது, அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.. தொடர்ந்து பாலமுருகன் விசாரிக்கவும், எரிச்சலடைந்த சிறுவர்கள், ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் என்றும் பாராமல், அவரை சுற்றி வளைத்து கற்களால் தாக்கியிருக்கிறார்கள்..
அதிர்ச்சி: படிக்க வேண்டிய சிறுவர்களின் கையில் போதை உள்ளதும், ரோந்து சென்ற எஸ்ஐ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உள்ளதும், போலீஸார் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications