சென்னையில் விடுமுறை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. ஆட்சியர் அறிவிப்பு
சென்னை: சென்னையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து சென்னையில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை,தாம்பரம், வண்டலூரிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில வெள்ளம் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை பெய்து வருவதால்சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications