சென்னையில் நாளை அரசு, தனியார் உள்பட அனைத்து பள்ளிகளும் இயங்கும்! பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வெள்ளிக்கிழமை அட்டவணைபடி இயங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு நடந்து வருகிறது. சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னை மாவட்டத்தில் நாளை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், தனியார் உள்பட அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் வெள்ளிக்கிழமைக்கான அட்டவணை அடிப்படையில் இயங்கும். திருத்திய கால அட்டவணைப்படி நாளை பள்ளிகள் இயங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications