Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை புறநகர்.. அதுவும் மதிய நேரத்தில் இப்படியா? ரேஷனில் வருகிறது மாற்றம்? "நேரமே" சரியில்ல போல

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளில், ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், மற்றொரு அதிரடி கிளம்பியிருக்கிறது.

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மற்ற துறைகளை போலவே, ரேஷன் கடை ஊழியர்களின் பங்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை..

Are timings changed in Tamil Nadu Ration Shops and what are the Good News to the Ration Card Holders by TN Government

ஞாயிற்றுக்கிழமை: ஆனால், மற்றவர்களை போலவே, ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களுக்கும் விடுமுறை வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் நீண்ட காலமாகவே கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்தும் வருகிறது.. அந்தவகையில், ஞாயிறுதோறும் விடுமுறை திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியக்கூறு குறித்து, ஊழியர்கள் மற்றும் கார்டுதாரர்களுடன் ஆலோசிக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

வெள்ளிக்கிழமை: கடந்த 2014ல் தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. அதில், அலுவலகம் செல்வோர் ரேஷன் பொருட்கள் வாங்க வசதியாக, மாதத்தின் முதலாவது, 2வது ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாட்களாகவும், அந்த வாரங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.. அதே நடைமுறைதான் இப்போதும் அமலில் உள்ளது.

ஆனால், விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைகளில், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றதாம்.. எனவே, ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில்லையாம்...

ரேஷன் ஊழியர்கள்: அதுவும் இல்லாமல், ஞாயிற்றுக்கிழமைகளில் மிகக்குறைந்த ரேஷன்தாரர்களே பொருட்களை வாங்க வருகிறார்களாம். இதையெல்லாம் கருத்தில்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை விரைவில் முடிவெடுக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், ரேஷன் கடை செயல்படும் நேரத்தையும் மாற்றியமைக்க போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ரேஷன் பொருட்களை, சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல், 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும் செயல்படுகின்றன.. மற்ற மாவட்டங்களில் காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் செயல்படுகின்றன...

நேரம் மாறுகிறது: சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மறுபடியும் திறப்பதற்கு, 2:30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.

அதனால்தான், ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கூடிய சீக்கிரம் வெளியாக போகிறதாம். ஏற்கனவே ரேஷன் பொருட்கள் கடத்தல்கள் தமிழக எல்லைகளில் அதிகரித்து காணப்படுகிறது.

எனவேதான், இந்த கடத்தலில் ஈடுபடுவோர் மீது தமிழக போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது ரேஷன் கடைகளில் நேரம் மாற்றியமைக்கப்படும்போது, முறைகேடுகள் மேலும் தவிர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+