Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. புறநகர் ரயிலில் வருது அதிரடி மாற்றம்.. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இயக்கப்படும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழத்தடங்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 4 லட்சம் பயணிகள் பயன்பெறவுள்ளனர்.

சென்னை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது போக்குவரத்து நெரிசல் தான். ஆனால், சென்னை பயணிகளுக்கு மின்சார ரயில் சேவைகள் பெரும் வரப்பிரசாதமாக இருந்து வருகின்றன. குறைந்த நேரத்தில் பயணம், செலவு என பொதுமக்களுக்கு இன்றியமையாத சேவையை ஆற்றி வருகிறது. சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மின்சார ரயில் சேவை மட்டும் இல்லையென்றால் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்துக்கு மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது.

Express train electric train

சென்னை புறநகர் ரயில்களை நம்பி வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஐடி துறையில் வேலை செய்வோர், வியாபாரம், தொழில் செய்வோர் என ஏராளமானோர் உள்ளனர். இந்த புறநகர் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையில் இயக்கப்படும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழத்தடங்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்தித் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னையில் இருந்து புறநகா் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் 9 பெட்டிகள் இருக்கும். தினமும் புறநகா் ரயில்களில் 8.6 லட்சம் பேரும், நகா் பகுதியில் 3.4 லட்சம் பேரும் பயணிக்கின்றனா்.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 12 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புறநகா் மின்சார ரயில்களில் பயணிப்போா் அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து இந்த வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 21 சதவீதம் போ் அதாவது கூடுதலாக 4 லட்சம் போ் பயணிப்பா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+