இஸ்லாமியர்களுக்கு வட்டி இல்லா கடன்.. நகைகளை அடகு வைக்க வைத்து ஏமாற்றிய தி.நகர் நகைக்கடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைகளை அடகு வைத்தால் வட்டியில்லாத கடன் தருவதாக கூறி இஸ்லாமியர்களிடம் நகைகளை மோசடி செய்ததாக தியாகராயர் நகரில் இயங்கி வந்த ரூபி நகைக்கடை மீது புகார் எழுந்துள்ளது,

சென்னை தியாகராய நகரில் ரூபி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இங்கு அணீஸ் என்பவர், நகைகளை அடகுவைத்தால் இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லாத கடன் தருவதாக நகைகளை அடகு வைக்க வைத்துள்ளார்.

 chennai t nagar private jewellery shop cheating more than 200 people

இதை நம்பி 200க்கும் மேற்பட்டோர் ரூபி நகைக்கடையில் ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென ரூபி நகை அடகுக்கடை மூடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதபற்றி விசாரித்ததில் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்கள்.

இதனால் 200க்கும் மேற்பட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் நகைகளை ஏமாற்றிவிட்டு தப்பிய அணீஸ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நகைகளை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனால் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் இன்று மாலை பரபரப்பாக காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+