சென்னை, தாம்பரத்தில் 46 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்! தேர்தல் நேரத்தில் டிரான்ஸ்பர்
சென்னை: சென்னை மாநகரத்தில் 13 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பணியாற்றும் 33 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த காவல்தூறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் 13 இன்ஸ்பக்டர்களை இடமாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஆனந்த் குமார், தர்மராஜ், பிரவீன் குமார், கிருஷ்ணகுமார், பாஸ்கர், ரோஹிணி உள்ளிட்ட 13 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 33 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications