அரக்கோணத்தில் விழுந்த இடி.. சென்னை சென்ட்ரலில் 94 மின்சார ரயில்கள் ஒரேடியாக ரத்து.. அதிர்ந்த பயணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இன்று இரவு 10 ரயில்களும், நாளை இரவு 84 ரயில்களும் என மொத்தமாக 94 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை-அரக்கோணம் காணம் மார்க்கத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை நவம்பர் 19 காலை 10 மணி வரை என 12 மணி நேரம் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த சேவை ரத்து செய்யப்பட்டது.

Chennai to Arakkonam and 94 Electric Trains are cancelled from tonight, Southern Railways Announcement

சிறப்பு ரயில்கள்: அதேபோல, 10 மின்சார ரயில்கள் சில ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் உள்ளதாவது: "சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு நடைபெற உள்ளது. எனவே இன்று இரவு 9.25, 10.25 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில், இரவு 10 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில், இரவு 10.20, 11.45 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகின்றன.

ரயில்கள் ரத்து: இரவு 11.15 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில், இரவு 11.15 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரயில், இரவு 8.50 மணிக்கு அரக்கோணத்திலிருந்து மூர்மார்க்கெட்டிற்கு வரும் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து மூர்மார்க்கெட் வரும் ரயில், இரவு 11.55 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

பட்டாபிராம்: இதேபோல, மறுமார்க்கமாக பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து காலை 3.20, 5.30, 6.35, 7.40, 8.45 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்கள், ஆவடியில் இருந்து காலை 3.50, 4 மணி, 4.25, 6.10, 6.40, 9.15 மணிக்கு மூர்மார்க்கெட் புறப்படும் ரயில்கள் ரத்து.

ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 4.10, 4.35, 6 மணி, 7.05, 7.40, 7.55, 8.45 மணிக்கு புறப்படும் ரயில்கள், திருவள்ளூரில் இருந்து காலை 3.50, 4.45, 5.55, 6.50, 7.15, 7.40, 8.05, 8.20, 8.30, 9.10, 9.25 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அரக்கோணம்: அரக்கோணத்தில் இருந்து காலை 3.45, 4.25, 5.25, 6.40, 7.10, 8.15 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரயில்கள், திருத்தணியில் இருந்து காலை 4.30, 5.30, 7 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் ரயில்கள், அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 7.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது" என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.

ஆக இன்று இரவு 10 ரயில்களும், நாளை 84 ரெயில்களும் என மொத்தமாக 94 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, பயணிகளுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+