கஜா வருவது இருக்கட்டும்.. ஆனால் சென்னைக்கு என்ன கிடைக்கும்.. இங்கே வெயிலா இருக்கே!
Recommended Video

சென்னை: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல். இதனால் சென்னைக்கு மழை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர். காரணம் இங்கு பகலில் வெயில் அடிக்கிறது. ராத்திரியில் பனி கொட்டுகிறது.
வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஜா என்ற புயல் உருவானது. இந்த புயல் தற்போது இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ.தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் நாளை மாலை பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கிறது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதன் வேகம் 10 கி.மீ.ராக அதிகரித்துள்ளது.

வேகம் அதிகரிக்கும்
இதையடுத்து கடலூர்,தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். இரவுக்குள் கஜா புயல் வேகம் பல மடங்கு பெருகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு என்ன கிடைக்கும்
அதேசமயம், இந்த புயலால் சென்னைக்கு என்ன கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தற்போது சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஒரு சொட்டு கூட மழை இல்லை. வெயில்தான் அடிக்கிறது. எனவே மழைக்கான வாய்ப்பு எந்த அளவுக்கு என்பதை இப்போதே கணிக்க முடியவில்லை.

தொலைத்தொடர்பு
இதற்கிடையே நாளை இரவு புயலால் தொலை தொடர்பு துண்டிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.

அனுமதி மறுப்பு
ஆனால் கஜா புயல் மெல்ல வந்து கொண்டு இருக்கிறது. அந்த புயல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி மறுக்கபட்டு உள்ளது.
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications