பெண் சொன்ன புகார்.. சென்னை கோயம்பேடு துணை ஆணையர் மீது ஆக்ஷன்.. கமிஷனர் அருண் அதிரடி!
சென்னை: சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் காவல் ஆணையரகத்தில் விளக்கம் தர, சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன் குறித்து பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் புகார் கூறியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுக்கு பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணின் மகன் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக அந்தப் பெண் கோயம்பேடு காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தன்னை பற்றி தவறாகப் பேசியதாகவும், பெண்ணின் புகாரை அடுத்து கோயம்பேடு துணை ஆணையர் அதீவிரபாண்டியன் விளக்கம் தர சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
கோயம்பேடு காவல் மாவட்ட பணிகளை அதிவீரபாண்டியன் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மீது கமிஷனர் அருண் நடவடிக்கை எடுத்துள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications