சென்னையில் நெஞ்சை பிடித்தபடியே சாலையில் சரிந்த இளைஞர்! போலீஸ் எஸ்ஐ மகேந்திரனுக்கு குவியும் பாராட்டு
சென்னை: சென்னையில் நெஞ்சு வலியால் சாலையில் சரிந்து போராடிய இளைஞர் உயிரை வாகன தணிக்கையில் இருந்த போலீஸார் காப்பாற்றிய சம்பவத்தால் அவர்களுக்கு பாதுகாப்பு குவிகிறது.
துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு அருகே கடந்த 6ஆம் தேதி போலீஸார் வாகனத் தணிக்கை மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதியம் 1 மணி அளவில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தார்.

அப்போது அவர் திடீரென நெஞ்சை பிடித்தபடியே சாலையில் சரிந்து விழுந்தார். இதைக் கண்ட உதவி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட போலீஸார் ஓடிச் சென்று அவரை தூக்கினர். அப்போது அவர் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டார்.
உடனடியாக அந்த காவலர்கள் இளைஞரை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஈசிஜியும் எடுக்கப்பட்டது.இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (32) என்பதும் அவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. வேலைக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் கீழே சரிந்ததும் தெரியவந்தது.
போலீஸார் அந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க நேரிட்டதால் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். முருகனை காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட போக்குவரத்து போலீஸாரை துணை ஆணையர் பண்டி கங்காதர் நேரில் அழைத்து பாராட்டினார்.
அது போல் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேரை போலீஸார் காப்பாற்றியுள்ளனர். பலருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து பின்னர் மருத்துவமனைகளுக்கு கொண்டு போய் அங்கு அவர்களை காப்பாற்றியுள்ளனர்.
மனிதர்கள் மட்டுமில்லை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்குக் கூட வாயோடு வாய் வைத்து மூச்சுக் காற்றை கொடுத்தும் சிபிஆர் செய்தும் போலீஸார் காப்பாற்றிய சம்பவங்களும் நடந்துள்ளன. அது போல் காணாமல் போனவர்களை அவர்களுடைய உறவுகளுடன் சேர்த்து வைப்பது, குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளுக்கு பெண் போலீஸார் தாய்ப்பால் கொடுப்பது, வீதிகளில் மிகவும் அழுக்காக சுற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குளிப்பாட்டி, ஷேவிங் செய்து புத்தாடைகளை எடுத்துக் கொடுத்து அவர்களுக்கு புது வாழ்வு தந்த சம்பவங்கள் என ஏராளமாக அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications