சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ 250 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.. அமைச்சர் அதிரடி
சென்னை: சென்னை வடபழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சாலிகிராமம் காந்தி நகரில் தனியார் வாகனங்கள், கட்டுமான கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ 250 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர் சேகர் பாபு ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில் யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். தடைப்பட்டிருந்த இந்த இடமானது முழுக்க ஏழை எளியவர்கள் பயன்படும் வகையில் சமுதாய நோக்கத்தோடு இந்த இடத்தைப் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம்
வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் மேம்படுத்துவதற்கான திட்டம் நிச்சயமாக இந்த இடத்தில் செயல்படுத்த முதல்வர் அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தெரிவித்தார்.

100 நாட்கள்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்துவோம். இந்து சமய அறநிலையத் துறை சொத்துகளை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் மீட்போம். தமிழ்நாட்டில் பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறது.

கோயில்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். தமிழில் அர்ச்சனை செய்யாத கோயில்கள் கண்காணிக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ஆட்சி பொறுப்பேற்பு
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அது போல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது கருணாநிதியின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications